“இது மனித காதல் அல்ல.. அதையும் தாண்டி புனிதமானது..” இறுதிச் சடங்கில் குரங்கு செய்த நெகிழ்ச்சி சம்பவம்..!!

monkeyfuneral3 1666938722

ஒரு விலங்கு எந்த மனித நண்பனுடனும் பிணைப்பை ஏற்படுத்தும்போது, ​​அவற்றின் அன்புக்கு எல்லையே இல்லை. ஜார்க்கண்டில் உள்ள தியோகர் மாவட்டத்தில் உள்ள பிரம்சோலி கிராமத்தில் இருந்து இதுபோன்ற ஒரு காட்சி காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


அந்த கிராமத்தைச் சேர்ந்த முன்னா சிங் என்பவர் சமீபத்தில் காலமானார். அவரது இறுதிச் சடங்கு நடந்து கொண்டிருந்தபோது, அவரின் வீட்டில் அவரது உறவினர்கள், நண்பர்கள், கிராம மக்கள் அனைவரும் அவருக்கு இறுதி மரியாதை செலுத்தி வந்தனர். அப்போது அங்கு வந்த குரங்கு, முன்னா சிங்கின் உடலுக்கு அருகில் அமர்ந்தது. இறந்தவரின் முகத்தை தன் கைகளால் தொட்டு, முத்தமிட்டு அவர் மறைந்ததை ஏற்க முடியாமல் நீண்ட நேரம் அங்கேயே இருந்தது.

இந்த சம்பவம் காண்போரை நெகிழ வைத்தது. இதுகுறித்து அந்த கிராம மக்கள் கூறுகையில், முன்னா சிங் உயிருடன் இருந்தபோது சுற்றுவட்டார குரங்குகளுக்கும் நாய்களுக்கும் உணவளித்துக் கொண்டே இருந்தவர். பசிக்காக அலைபவர்களுக்குத் தவிர்த்து உணவளித்த மனிதரின் மரணத்தை அந்த விலங்கு உணர்ந்தது போல இருக்கிறது என்றனர்.

அந்தக் காட்சி அங்கு இருந்தவர்களால் வீடியோ எடுக்கப்பட்டது. சில நிமிடங்களுக்குள் அது சமூக ஊடகங்களில் பரவி, மனிதனும் விலங்கும் இடையே இருக்கும் பாசத்திற்கான சாட்சி என பலரும் பகிரத் தொடங்கினர். சிலர் இந்த குரங்கை அனுமனின் தூதர் என்றும், கடவுளின் விளையாட்டு என்றும் கருதுகின்றனர். அந்த கிராம மக்கள் அந்தக் குரங்குக்கு மரியாதை செலுத்தத் தொடங்கியுள்ளனர். விலங்குகளின் பாசமும், உணர்வுகளும் மனிதர்களுக்கு சமமாகவே இருக்கிறது என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறது ஜார்க்கண்ட் பிரம்சோலி கிராமத்தின் இந்த நெஞ்சை உருக்கும் சம்பவம்.

Read more: IPL பட்டத்தை வென்ற கையோடு உரிமையை விற்க திட்டமிடும் RCB உரிமையாளர்..!! அணியின் தற்போதைய மதிப்பு எவ்வளவு தெரியுமா..?

Next Post

பெரும் பணக்கார நாடாக மாறப்போகும் இந்தியா! டன் கணக்கில் புதைந்து கிடக்கும் தங்கம்... எங்கு தெரியுமா?

Tue Jun 10 , 2025
இந்தியாவில் மிகப்பெரிய தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுதந்திரத்திற்குப் பிறகு முதல் முறையாக, நாட்டில் ஒரு புதிய தங்கச்சுரங்கம் செயல்படத் தொடங்க உள்ளது. எங்கு தெரியுமா? இந்தியாவில் நிலத்தடியில் அதிக தங்க இருப்பு இல்லை, அதனால்தான் வேறு சில நாடுகளைப் போல இங்கு தங்கம் பெரிய அளவில் காணப்படவில்லை. ஆனால் சமீபத்தில், இந்தியாவில் மிகப்பெரிய தங்க இருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுதந்திரத்திற்குப் பிறகு முதல் முறையாக, ஒரு புதிய தங்கச் சுரங்கம் செயல்படத் தொடங்க […]
goldreserveinmp1 1746346649 1

You May Like