கடைசி வாய்ப்பு.. இதை செய்யலைன்னா ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும்..!! உடனே அப்டேட் பண்ணுங்க..

Ration Card 2025

அந்தியோதயா ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் அருகில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று இன்றைக்குள் ஆதார் கார்டு சரிபார்ப்பு மற்றும் கைவிரல் ரேகை பதிவு செய்து தங்களின் இருப்பை உறுதி செய்ய வேண்டும்.. இல்லையென்றால் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும்.


மத்திய, மாநில அரசுகள் இணைந்து நாடு முழுவதும் வறுமைக்கோட்டிற்கு கீழ் இருப்பவர்களுக்கு முன்னுரிமை மற்றும் அந்தியோதயா ரேஷன் கார்டு (Ration card ) வைத்திருப்பவர்களுக்கு இலவச அரிசி கொடுக்கின்றன. ஒரு குடும்பத்துக்கு 35 கிலோ வரை இந்த அரிசி கொடுக்கப்படுகிறது.

ஆனால், இதில் பல முறைகேடுகள் நடப்பதாக மத்திய அரசு கண்டுபிடித்துள்ளது. இந்த குறைபாடுகளை எல்லாம் களையும் பொருட்டு அந்தியோதயா திட்ட ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களின் இருப்பை உறுதி செய்யும் வகையில் ஆதார் அங்கீகார சரிபார்ப்பு முறையை மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. இதற்கான காலக்கெடு ஜூன் மாதம் 30 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்குள் அருகில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று இன்றைக்குள் ஆதார் கார்டு சரிபார்ப்பு மற்றும் கைவிரல் ரேகை பதிவு செய்து தங்களின் இருப்பை உறுதி செய்ய வேண்டும்

இல்லையென்றால் அந்தியோதயா திட்டத்தின் கீழ் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களின் குடும்ப அட்டைகள் ரத்துசெய்யபடும். ஆதார் சரிபார்ப்பு முடித்தவர்களுக்கு பிரச்சனையில்லை, முடிக்காதவர்களுக்கு மட்டுமே ரேஷன் கார்டு ரத்தாகி, பொருட்கள் ஏதும் கிடைக்காமல் போகும். 

Read more: அரசியல் கொலைகள்.. போதைப் புழக்கம்.. பெண்களுக்கு பாதுகாப்பே இல்லாத நிலை – திமுக ஆட்சியில் தவிக்கும் தமிழகம்!

Next Post

8வது ஊதியக் குழு.. ஓய்வூதியதாரர்களுக்கு ஜாக்பாட்.. விரைவில் முக்கிய அறிவிப்பு..

Mon Jun 30 , 2025
8வது ஊதியக் குழுவின் கீழ் ஓய்வூதியக் காலத்தை 12 ஆண்டுகளாகக் குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான 8வது ஊதியக்குழு தொடர்பான அறிவிப்பை கடந்த ஜனவரி மாதம் அறிவித்தது. ஆனால் 8வது குழுவின் தலைவர், உறுப்பினர்களை முறையாக நியமித்தல் மற்றும் விரிவான குறிப்பு விதிமுறைகள் (ToR) வெளியிடுதல் ஆகியவை இன்னும் இறுதி செய்யப்படவில்லை. 8வது ஊதியக் குழு ஜனவரி 1, […]
1732771 8thpaycommissionupdate2 1

You May Like