அந்தியோதயா ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் அருகில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று இன்றைக்குள் ஆதார் கார்டு சரிபார்ப்பு மற்றும் கைவிரல் ரேகை பதிவு செய்து தங்களின் இருப்பை உறுதி செய்ய வேண்டும்.. இல்லையென்றால் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும்.
மத்திய, மாநில அரசுகள் இணைந்து நாடு முழுவதும் வறுமைக்கோட்டிற்கு கீழ் இருப்பவர்களுக்கு முன்னுரிமை மற்றும் அந்தியோதயா ரேஷன் கார்டு (Ration card ) வைத்திருப்பவர்களுக்கு இலவச அரிசி கொடுக்கின்றன. ஒரு குடும்பத்துக்கு 35 கிலோ வரை இந்த அரிசி கொடுக்கப்படுகிறது.
ஆனால், இதில் பல முறைகேடுகள் நடப்பதாக மத்திய அரசு கண்டுபிடித்துள்ளது. இந்த குறைபாடுகளை எல்லாம் களையும் பொருட்டு அந்தியோதயா திட்ட ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களின் இருப்பை உறுதி செய்யும் வகையில் ஆதார் அங்கீகார சரிபார்ப்பு முறையை மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. இதற்கான காலக்கெடு ஜூன் மாதம் 30 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்குள் அருகில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று இன்றைக்குள் ஆதார் கார்டு சரிபார்ப்பு மற்றும் கைவிரல் ரேகை பதிவு செய்து தங்களின் இருப்பை உறுதி செய்ய வேண்டும்
இல்லையென்றால் அந்தியோதயா திட்டத்தின் கீழ் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களின் குடும்ப அட்டைகள் ரத்துசெய்யபடும். ஆதார் சரிபார்ப்பு முடித்தவர்களுக்கு பிரச்சனையில்லை, முடிக்காதவர்களுக்கு மட்டுமே ரேஷன் கார்டு ரத்தாகி, பொருட்கள் ஏதும் கிடைக்காமல் போகும்.