“ தொண்டர்களை ஏமாற்ற நினைக்கும் தலைமை..” பாஜகவில் இருந்து விலகிய நிர்வாகி பேட்டி..

தமிழக பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில தலைவர் நிர்மல் குமார் அதிமுகவில் இணைந்தார்.

தமிழக பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில தலைவராக இருந்தவர் நிர்மல் குமார்.. இந்த நிலையில் அவர் இன்று பாஜகவில் இருந்து விலகி, அதிமுகவில் இணைந்தார்.. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அவர் தன்னை அதிமுகவில் இணைத்து கொண்டார்.. இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நிர்மல் குமார், ” பாஜகவில் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்துவிட்டேன்..


என்னால் முடிந்தவரை, பல சங்கடங்களை கடந்து ஒன்றரை ஆண்டுகளாக பயணித்தேன்.. உண்மையாக நேர்மையாக உழைத்தேன்.. ஆனால் வேதனை மட்டுமே மிச்சம்.. மாய உலகத்தில் சுற்றி வரும் ஒரு நபரால் கள எதார்த்தத்தை என்றும் உணர முடியாது.. தொண்டர்கள், கட்சியை ஏமாற்ற நினைக்கும் ஒரு தலைமையை நம்பி எப்படி பயணிக்க முடியும்..” என்று தெரிவித்தார்..

RUPA

Next Post

அடுத்தடுத்து ஏற்பட்ட 3 நிலநடுக்கங்கள்.. பீதியில் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள்..

Sun Mar 5 , 2023
உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசியில் இன்று அடுத்து 3 நிலநடுக்கங்கள் ஏற்பட்டது.. உத்தரகாசியில் இன்று அதிகாலை 2.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இரண்டு தொடர்ச்சியான நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக மாவட்ட பேரிடர் மேலாண்மை அதிகாரி தேவேந்திர பட்வால் தெரிவித்தார். நள்ளிரவு 12.45 மணியளவில் ஏற்பட்ட முதல் நிலநடுக்கத்தின் மையம், மாவட்டத்தின் பத்வாரி பகுதியில் உள்ள சிரோர் வனப்பகுதியில் இருந்ததாக அவர் கூறியுள்ளார்.. இதை தொடர்ந்து அடுத்தத்தடுத்து 2 நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.. […]

You May Like