10,000-க்கும் அதிகமான பாடல்களை பாடிய பழம்பெரும் பின்னணி பாடகி வாணி ஜெயராம் காலமானார்…

பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் இன்று காலமானார்.. அவருக்கு வயது 78.

1973-ம் ஆண்டு ‘தாயும் சேயும்’ என்ற படத்தின் மூலம் தமிழில் பின்னணி பாடகியாக வாணி ஜெயராம் அறிமுகமானார்.. அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட 19 மொழிகளில் 1,000-க்கும் மேற்பட்ட படங்களில் 10,000க்கும் அதிகமான பாடல்களை அவர் பாடி உள்ளார்.. மல்லிகை, என் மன்னன் மயங்கும், ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல், கேள்வியின் நாயகனே உள்ளிட்ட எண்ணற்ற பாடல்களை வாணி ஜெயராம் பாடி உள்ளார்..

1675501547 0154

சிறந்த பெண் பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதை 3 முறை பெற்றவர் வாணி ஜெயராம்.. மேலும் ஒடிசா, ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு மற்றும் குஜராத் மாநிலங்களில் இருந்து மாநில அரசின் விருதுகளையும் வென்றுள்ளார். 2012 ஆம் ஆண்டில், தென்னிந்திய திரைப்பட இசையில் அவர் செய்த சாதனைகளுக்காக ஃபிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது அவருக்கு வழங்கப்பட்டது.. குடியரசு தினத்தை ஒட்டி அண்மையில் வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷ்ண் விருது அறிவிக்கப்பட்டிருந்தது..

இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் வாணி ஜெயராம் இன்று காலமானார்.. அவரின் மறைவு இந்திய திரையுலகில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. அவரின் மறைவுக்கு பல்வேறு பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்..

RUPA

Next Post

புதிய மாவட்ட ஆட்சியர்கள் இதை எல்லாம் செய்ய வேண்டும்.. முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுரை..

Sat Feb 4 , 2023
புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட ஆட்சியர்கள் பொறுப்புடன் கடமையாற்ற வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.. தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார்.. இதை தொடர்ந்து முதலமைச்சர் புதிய ஆட்சியர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கி உள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட ஆட்சியர்கள் பொறுப்புடன் கடமையாற்ற வேண்டும்.. மாவட்டத்தில் என்னென்ன பணிகள் நடைபெறாமல் இருக்கிறது, […]
#5_நிமிடத்தில்_ஆட்சியே_மாறும்..!! திமுகவை பயமுறுத்தும் ஹேஷ்டேக்..!! ட்விட்டரில் ட்ரெண்டிங்..!!

You May Like