கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியையும், கள்ளக்காதலனையும் மருத்துவமனையில் வைத்து கறி வெட்டும் கத்தியால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
ஈரோடு மாவட்டம் மலையம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நந்தகோபால். இவர் இறைச்சி கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு திருமணமா இரண்டு மகன்கள் ஒரு மகள் உள்ளனர். இதற்கிடையே, ராஜேஸ்வரிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த இளங்கோ என்ற வாலிபருக்கும் கடந்த 5 ஆண்டுகளாக கள்ள உறவு இருந்து வந்துள்ளது. மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த நந்தகோபால், தொடர்ந்து கண்காணித்து வந்திருக்கிறார். சம்பவத்தன்று நந்தகோபால், இறைச்சிக் கடைக்கு செல்வதாக ராஜேஸ்வரியிடம் கூறிவிட்டு மறைந்து நின்றுள்ளார். கணவர் கடைக்கு சென்று விட்டார் என்று நினைத்த ராஜேஸ்வரி, கள்ளக்காதலன் இளங்கோவை அழைத்துக் கொண்டு சாவடிபாளையம் பகுதியில் சந்தித்து பேசிக்கொண்டிருந்துள்ளனர்.

அப்போது பின் தொடர்ந்து வந்த நந்தகோபால், இளங்கோவையும் ராஜேஸ்வரியையும் கையும் களவுமாக பிடித்து சத்தம் போட்டு இருக்கிறார். இதில், ஏற்பட்ட வாக்குவாதத்தில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து இருவரையும் குத்தியுள்ளார். இதில் காயம் அடைந்த ராஜேஸ்வரியும் இளங்கோவும் அலறி துடிக்க, அங்கிருந்து நந்தகோபால் தப்பி ஓடி இருக்கிறார். அக்கம் பக்கத்தினர் ராஜேஸ்வரியையும் இளங்கோவையும் ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளன.

மனைவியை பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு சென்று இருக்கிறார் நந்தகோபால், அங்கே சிகிச்சையில் ராஜேஸ்வரியும் இளங்கோவும் அருகருகே அமர்ந்து பேசிக்கொண்டு இருந்திருக்கிறார்கள். மருத்துவமனையிலும் நீங்கள் பிரியாமல் இருக்கிறீர்களே என்று ஆத்திரப்பட்ட நந்தகோபால், கறி வெட்டும் கத்தியால் இளங்கோவையும் ராஜேஸ்வரியையும் வெட்டி இருக்கிறார். பிற நோயாளிகள் அலறி துடித்து ஓடி இருக்கிறார்கள். இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து நந்தகோபாலை கைது செய்தனர்.