திருப்பூர் அருகே பெற்ற தந்தையே மகளை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்…..! நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு….!

திருப்பூர் அருகே உள்ள உடுமலை பகுதியைச் சேர்ந்தவர் 59 வயது கூலி தொழிலாளி. இவர் கடந்த 2019 ஆம் வருடம் டிசம்பர் மாதம் 2ம் தேதி வீட்டில் இருந்த தன்னுடைய மனநலம் பாதிக்கப்பட்ட மகளிடம் தவறாக நடக்க முயற்சி செய்து பலமுறை அவரை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.


இத்தகைய சூழ்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி அவர் படிக்கும் பள்ளியில் பணியாற்றும் ஒரு ஆசிரியரிடம் இது பற்றி கூறியிருக்கிறார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த ஆசிரியை இது குறித்து உடுமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் வழங்கினார்.

அந்த புகாரை அடிப்படையாகக் கொண்டு போக்சோ சட்டத்தின் கீழ் அந்த தொழிலாளியின் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். அதோடு, இந்த வழக்கு திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் விசாரணைகள் அனைத்தும் முடிவுற்ற நிலையில், இந்த வழக்கில் நேற்று நீதிபதி பாலு தீர்ப்பு வழங்கினார்.

அந்த தீர்ப்பில் மகளை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து 5000 ரூபாய் அபராதம் வழங்கவும் உத்தரவு பிறப்பித்தார் அந்த சிறுமியின் மறுவாழ்வுக்காக அரசு தரப்பில் 2.5லட்சம் ரூபாய் வழங்கவும் உத்தரவு பிறப்பித்தார். மேலும் இந்த வழக்கில் அரசு தரப்பில் ஜமீலா பானு ஆஜராகி வாதாடினார்.

Next Post

சாம்சங் நிறுவனத்தின் அசத்தல் ஃபோன்..!! 3 ஆக மடித்துக் கொள்ளும் வசதி.!! விலை எவ்வளவு தெரியுமா..?

Sun Mar 26 , 2023
சாம்சங் காலக்ஸியின் எஸ்23 எஃப்இ மாடல் போன் இன்னும் டிசைன் செய்யப்படவில்லை என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மின்னணு பொருட்களில் முக்கியமானது செல்போன்கள். இவை காலத்திற்கேற்ப நவீன மாற்றங்களுடன் விற்பனைக்கு வருகின்றன. பட்டன் போன், செங்கல் போன், வாக்கி டாக்கி, மிகச் சிறிய வகை போன் என தொடங்கி தற்போது போனையே கம்ப்யூட்டர் போல் ஆபரேட் செய்யும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்துள்ளது. அந்த வகையில், இந்த ஆண்டில் சாம்சங் நிறுவனம் […]
WhatsApp Image 2023 03 26 at 9.51.55 AM

You May Like