தாயும், மகளும் ஒரே நபருடன் கள்ளக்காதல்!. தேனிலவு கொலை போல தெலுங்கானாவில் பயங்கரம்!. ஐஸ்வர்யாவின் பகீர் பின்னணி!

Telangana murder 11zon

மேகாலயாவிற்கு தேனிலவுக்கு சென்ற ராஜா ரகுவன்ஷி என்பவரை அவரது மனைவி சோனம் கொலை செய்த சம்பவத்தை போன்று தெலுங்கானாவிலும் மற்றொரு பயங்கர திட்டமிட்ட கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திருமணமாகி ஒரே மாதத்தில் தேதேஸ்வர் என்ற இளைஞரை அவரது மனைவி ஐஸ்வர்யா தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்த பின்னணி குறித்து பார்க்கலாம்.


தெலுங்கானா மாநிலம் ஜோகுலம்பா கட்வால் மாவட்டத்தை சேர்ந்தவர் தேஜஸ்வர் (வயது 32) தனியார் நில சர்வேயராக வேலை செய்து வந்தார்.ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் கல்லூரை சேர்ந்தவர் ஐஸ்வர்யா. இருவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் 13-ம் தேதி திருமண நிச்சியதார்த்தம் நடந்தது.திருமணத்திற்கு 5 நாட்களுக்கு முன்பு ஐஸ்வர்யா திடீரென காணாமல் போனார். கண்ணூரில் உள்ள பிரபல வங்கியில் கேஷியராக உள்ள ஒருவரை காதலித்ததால் அவருடன் சென்று விட்டதாக கருதினர். இதனால் திருமண ஏற்பாடுகளை நிறுத்திவிட்டனர்.

இதனை அறிந்த ஐஸ்வர்யா திடீரென வீட்டிற்கு வந்தார். ஐஸ்வர்யா தனது வருங்கால கணவருக்கு போன் செய்து நான் யாரையும் காதலிக்கவில்லை வரதட்சணை கொடுக்க தனது தாய் சிரமப்படுவதை தாங்க முடியாமல் தனது தோழியின் வீட்டிற்கு சென்று இருந்தேன். நான் நான் வேறுயாரையும் நேசிக்கவில்லை; உங்களை திருமணம் செய்துகொள்ள விருப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து தேஜஸ்வருக்கும் ஐஸ்வர்யாவுக்கும் கடந்த 17-ம் தேதி திருமணம் நடந்தது. திருமண வாழ்க்கையில் பல கனவுகளோடு காத்திருந்த தேஜஸ்வருக்கு ஐஸ்வர்யாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. கணவர் வீட்டில் இல்லாததை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ஐஸ்வர்யா கள்ளக்காதலனுடன் மணிக்கணக்கில் பேசிவந்துள்ளார். இதனை அறிந்த தேஜஸ்வருக்கும் மனைவி ஐஸ்வர்யாவுக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்தநிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்ற தேஜஸ்வர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் ஐஸ்வர்யா மீது சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார் அளித்தனர்.

இதையடுத்து, ஐஸ்வர்யாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கூலிப்படையை ஏவி கணவரை கொலை செய்து வீசியதும், ஐஸ்வர்யா மற்றும் அவரது தாய்க்கும் இடையேயான முக்கோண காதலும் வெளிச்சத்துக்கு வந்தது. விசாரணையில், எனது தாய் கர்னூலில் உள்ள பிரபல வங்கியில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வந்தார். அப்போது வங்கியில் கேஷியராக வேலை செய்து வந்த திருமால் ராவ் என்பவருடன் தனது தாய் தொடர்பில் இருந்துவந்தார். இதையடுத்து தாய் சுஜாதா விடுமுறையில் சென்றதால், அந்த பணிக்கு நான் சென்றேன், அப்போது எனக்கு திருமால் ராவுடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் எங்கள் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றதால் அவருடன் மேலும் பழக்கம் அதிகரித்தது. பின்னர் இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தோம். இந்தநிலையில், தேஜஸ்வருடன் எனக்கு திருமணம் நடந்த பிறகும் கள்ளக்காதலனுடன் நான் அடிக்கடி பேசி வந்தேன். கள்ளக்காதலனுடன் 2 ஆயிரம் தடவைக்கு மேல் செல்போனில் இனிக்க இனிக்க பேசினேன். தேஜஸ்வர் ஊரில் இல்லாதபோது கள்ளக்காதலன் திருமால் ராவை வீட்டிற்கு வரவழைத்து உல்லாசமாக இருந்ததாக கூறினார்.

இதனை அறிந்த கணவர் தேஜஸ்வரை கொலை செய்ய திட்டம் தீட்டினார். இதற்காக 5 முறை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். அதன்படி கூலிப்படையினருக்கு பணம் கொடுத்து காரை அனுப்பி வைத்தார். காரில் வந்த நபர்கள் நிலம் அளக்க வேண்டும் என கூறி தேஜஸ்வரை காரில் அழைத்து சென்றனர். காரில் செல்லும் வழியில் கூலிப்படையினர் திடீரென கத்தியை எடுத்து தேஜஸ்வரின் கழுத்தை அறுத்தனர். மேலும் வயிறு உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக குத்தினர். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து தேஜஸ்வர் பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் தேஜஸ்வரின் உடலை ஆந்திர மாநிலம் பன்யம் அடுத்த சுகாரி மெட்டு பகுதியில் வீசிவிட்டு தப்பி சென்றனர். மேலும் தேஜஸ்வரின் உடலை வீடியோ காலில் திருமால் ராவிடன் கூலிப்படையினர் காண்பித்து வீசி சென்றுள்ளனர்.

மேலும் கொலைக்கு பிறகு ராவ், ரூ,20 லட்சம் கடன் வாங்கிக்கொண்டு ஐஸ்வர்யாவுடன் லடாக்கிற்கு தப்பி செல்ல முன்பதிவு செய்திருந்தார். அவர்கள் அந்தமான் தீவுகளுக்கு தப்பிச்செல்லவும் திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. இருப்பினும் அந்த திட்டம் தோல்வியடைந்தது. இதனை தொடர்ந்து போலீசார் கடந்த 21ம் தேதி தேஜஸ்வர் உடலை ஆந்திராவின் நந்தியால் மாவட்டத்தின் பன்யத்தில் உள்ள வயலில் மீட்டனர். கொலைக்கு ஐஸ்வர்யாவின் தாய் சுஜாதாவும் உதவி செய்ததாக தெரிகிறது. இதையடுத்து கொலையில் சம்பந்தப்பட்ட அனைவரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Readmore: பெரும் சோகம்!. பள்ளியில் ஏற்பட்ட வெடிவிபத்து, நெரிசலில் சிக்கி 29 மாணவர்கள் பலி!. 250க்கும் மேற்பட்டோர் காயம்!.

KOKILA

Next Post

ஏங்ங்ங்கக.. கூமாபட்டிக்கு போவாதீங்க..!! அலர்ட் செய்த அரசு.. Reels பார்த்து சென்ற இளைஞர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

Fri Jun 27 , 2025
சமூக ஊடகங்களில் “கூமாபட்டிக்கு வாங்க” என்ற ஹேஷ்டேக்குடன் பகிரப்படும் ரீல்ஸ் மற்றும் வீடியோக்கள், தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன. பசுமை மலைக்குன்றுகள், குற்றால வனவாசலின் அருகில் உள்ள மெல்லிய பச்சை தரைகள், பனித்துளிகள் நிறைந்த இயற்கைக் காட்சிகள் இளம் பயணிகளையும் சமூக ஊடக ஆளுமைகளையும் வெகுவாக ஈர்த்துள்ளன. ஆனால், இந்த இடங்கள் பொதுப்பணித்துறை மற்றும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பாதுகாக்கப்பட்ட பகுதிகள் என்பதால், பொதுமக்கள் அங்கு செல்ல அனுமதியில்லை […]
koomapatti

You May Like