உலகப் பணக்காரர்கள் பட்டியல்..!! 3-வது இடத்திலிருந்து 30-வது இடத்திற்கு தள்ளப்பட்ட அதானி..!!

உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 3-ம் இடத்தில் இருந்த கௌதம் அதானி, 30-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.


அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பெர்க் நிறுவனம், அதானி குழுமம் தொடர்பான குற்றச்சாட்டுகளை ஆய்வறிக்கையாக கடந்த மாதம் 25ஆம் தேதி வெளியிட்டது. அதில், அதானி குழுமத்தைச் சேர்ந்த நிறுவனங்கள் நிதிநிலை அறிக்கையில் தவறாக தகவல்களை அளித்து பங்குச் சந்தைகளில் ஆதாயத்தைத் தேடுவதாக குற்றம்சாட்டியது. இதன் காரணமாக அதானி குழுமத்திற்கு சொந்தமான நிறுவனங்களின் பங்குகள், பங்குசந்தைகளில் கடும் சரிவை சந்தித்தன. குழுமத்தின் நன்மதிப்பைப் பாதுகாக்க நிலுவையில் இருந்த கடன்களை அதானி குழுமம் திருப்பிச் செலுத்தியது. இருப்பினும், அதனால் பங்குகளின் வீழ்ச்சியை தடுக்க முடியவில்லை.

இந்நிலையில், கடந்த ஒரு மாதத்திற்குள் அதானி குழுமம் சுமார் ரூ.12.06 லட்சம் கோடி சொத்து மதிப்பை இழந்ததாக கூறப்படுகிறது. மேலும், ஹிண்டன்பெர்க் நிறுவனத்தின் ஆய்வறிக்கை வெளியாவதற்கு முன் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 120 பில்லியன் அமெரிக்க டாலார் சொத்து மதிப்புடன் 3ஆம் இடத்தில் அதானி இருந்தார். ஆனால், குழுமத்தின் சொத்து மதிப்பில் ஏற்பட்ட தொடர் வீழ்ச்சியால் சுமார் 80 பில்லியன் டாலா் சொத்துகளை இழந்து 40 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 30-வது இடத்திற்கு கௌதம் அதானி தள்ளப்பட்டுள்ளார். இந்நிலையில், இந்தியாவின் முகேஷ் அம்பானி, 80 பில்லியன் டாலா் சொத்து மதிப்புடன் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 10-வது இடத்தில் உள்ளார்.

CHELLA

Next Post

கொலையில் முடிந்த குழாயடி சண்டை..!! வீடு புகுந்து கணவன், மனைவிக்கு அரிவாள் வெட்டு..!! பரபரப்பு சம்பவம்..!!

Mon Feb 27 , 2023
கரூர் மாவட்டம் திருக்காம்புலியூர் பகுதியில் இளங்கோ, பத்மாவதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். நேற்று வீட்டிற்கு அருகில் உள்ள பொது குடிநீர் குழாயில் பத்மாவதி தண்ணீர் பிடிக்க சென்றுள்ளார். அப்போது, பத்மாவதி வீட்டிற்கு எதிரே வசித்து வரும் கார்த்தி என்பவரின் மனைவியும், தண்ணீர் பிடிக்க வந்துள்ளார். அப்போது இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் ஒருமையில் பேசி சண்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சண்டை குறித்து கார்த்தியின் மனைவி, கார்த்தியிடம் அழுது […]
murder with frnds

You May Like