அசத்தல்… ஆதார் அடையாள அட்டைதாரர்களின் புகார்…! ஆணையம் முக்கிய அறிவிப்பு…!

நிர்வாகச் சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறை தீர்ப்புத் துறையின் செப்டம்பர் மாதத்திற்கான தரவரிசை அறிக்கையின்படி, அனைத்து குரூப் ஏ அமைச்சகங்கள், துறைகள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளில் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்த தரவரிசையில் UIDAI தொடர்ந்து இரண்டாவது மாதமாக முதலிடம் பிடித்துள்ளது.

மத்திய பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பு மூலம் பெறப்பட்ட பொது மக்கள் குறைகளைத் தீர்ப்பதிலும், ஆதார் அடையாள அட்டைதாரர்களின் புகார்களை சரி செய்வதில் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் சிறந்து விளங்குகிறது. இந்திய தனித்துவ அடையாள ஆணையம், அதன் குறை தீர்க்கும் முறையை மேலும் வலுப்படுத்தவும், எளிமைப்படுத்தவும் உறுதிபூண்டுள்ளது. இந்திய தனித்துவ அடையாள ஆணையம் படிப்படியாக அதிநவீன அமைப்புடன் கூடிய வாடிக்கையாளர் தொடர்பு மேலாண்மை மூலம் மக்கள் குறை தீர்ப்பு நடவடிக்கைகளில் திறம்பட செயல்பட முடிவு செய்துள்ளது.

Vignesh

Next Post

பயங்கர சூறாவளி காற்றுடன் கரையை கடந்தது சித்ரங் புயல்..!! கனமழை எச்சரிக்கை..!! 5 பேர் உயிரிழப்பு..!!

Tue Oct 25 , 2022
வங்கக்கடலில் உருவான சித்ரங் புயல், 90 கிலோமீட்டர் சூறாவளிக் காற்றுடன் கரையைக் கடந்தது.  இதில், 5 பேர் உயிரிழந்தனர். மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதி தீவிர புயலாக வலுபெற்றது. சித்ரங் என பெயரிடப்பட்டுள்ள இப்புயல், படிப்படியாக வடக்கு வடகிழக்கு நோக்கி நகர்ந்து வந்தது. புயல் காரணமாக பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா […]
பயங்கர சூறாவளி காற்றுடன் கரையை கடந்தது சித்ரங் புயல்..!! கனமழை எச்சரிக்கை..!! 5 பேர் உயிரிழப்பு..!!

You May Like