தொழில்நுட்ப உலகில் பெரும் அதிர்வலை ஏற்படுத்தும் வகையில், பேஸ்புக், கூகிள், ஆப்பிள், மைக்ரோசாப்ட் மற்றும் நெட்ஃபிக்ஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் 18.4 கோடிக்கும் மேற்பட்ட பயனர்களின் பயனர்பெயர் மற்றும் கடவுச்சொற்கள் ஆன்லைனில் கசிந்துள்ளன என சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த தரவுகளில் கோடிக்கணக்கான மின்னஞ்சல் முகவரிகள், கடவுச்சொற்கள், அங்கீகார URL-கள், கூடவே வங்கிக் கணக்குகள், அரசு தளங்களுக்கு உள்ளீடு தகவல்கள் உள்ளிட்ட முக்கியமான தரவுகளும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால், இணையத்தை பயன்படுத்தும் ஒவ்வொருவரும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
இந்த தகவல்கள், ‘இன்ஃபோஸ்டீலிங் மால்வேர்’ எனப்படும் நுணுக்கமான ஹேக்கிங் மென்பொருளின் மூலம் திருடப்பட்டிருக்கலாம் என நிபுணர்கள் சந்தேகிக்கின்றனர். குறிப்பாக, ‘லம்மா ஸ்டீலர்’ போன்ற அபாயகரமான மென்பொருள்கள், ஹேக் செய்யப்பட்ட வலைத்தளங்கள் மற்றும் பயனரின் தனிப்பட்ட சாதனங்களிலிருந்து கடவுச்சொற்கள், கிரெடிட் கார்டு விவரங்கள், குக்கீகள் போன்றவற்றை திருடுகின்றன.
டார்க் வெப்பில் விற்கப்படும் தரவுகள்: இந்த திருடப்பட்ட தரவுகள், டார்க் வெப் எனப்படும் மறைமுக இணையத்தில் விற்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வணிக ஆவணங்கள் திருடல், பெரிய நிறுவனங்களை உளவு பார்வை, ரான்சம்வேர் தாக்குதல், அடையாளத் திருட்டு, நிதி மோசடி போன்ற அபாய செயல்களில் ஈடுபடலாம் என எச்சரிக்கப்படுகிறது.
பயனர்கள் பல்வேறு இணைய தளங்களில் ஒரே கடவுச்சொல் மற்றும் பயனர்பெயரைப் பயன்படுத்தும் பழக்கம் உள்ளது. இவ்வாறான தரவுகள் கசியும் சூழ்நிலையில், பல கணக்குகளை ஒரே சமயம் ஆக்கிரமிக்க சாத்தியம் அளிக்கிறது. இதன் விளைவாக பயனர்கள் பெரும் நஷ்டங்களை சந்திக்க நேரிடலாம்.
என்ன செய்யலாம்?
* வலுவான, கிறுக்கல் குறியீடுகள் கொண்ட கடவுச்சொற்களை பயன்படுத்த வேண்டும்.
* ஒரே கடவுச்சொல்லை பல தளங்களில் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
* இரு நிலை அங்கீகாரம் (Two-Factor Authentication) கட்டாயமாக அமைக்க வேண்டும்.
* பிணைப்பு இல்லாத, நம்பத்தகுந்த பாதுகாப்பு மென்பொருள்கள் பயன்படுத்த வேண்டும்.
* தங்களுடைய கணக்குகளில் சந்தேகத்திற்கிடமான செயற்பாடுகள் உள்ளதா என அடிக்கடி பரிசோதிக்க வேண்டும்.
இந்த தரவு கசிவைத் தொடர்ந்து தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் விசாரணையில் ஈடுபட்டுள்ளன. பயனர்களுக்கு மேலும் பாதுகாப்பான சூழல் வழங்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read more: தற்போது பரவும் கொரோனா பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தாது..!! – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்