லியோ படத்திற்கு பிறகு ரஜினியை வைத்து இயக்கும் லோகேஷ் கனகராஜ்..? புதிய அப்டேட்..

ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.. சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.. இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ளது.. எனினும் இப்படம் எப்போது வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை..


இதை தொடர்ந்து ரஜினியின் 170வது படத்தை யார் இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்தது.. இந்த சூழலில் தலைவர் 170 படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை லைகா நிறுவனம் வெளியிட்டது.. விமர்சன ரீதியாக மிகப்பெரிய வரவேற்பை பெற்ற ஜெய்பீம் படத்தை இயக்கிய த.செ. ஞானவேல் ரஜினியின் 170-வது படத்தை இயக்க உள்ளதாகவும், அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளதாகவும் லைகா அறிவித்தது.. இப்படம் 2024 ஆண்டு வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது..

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த்தின் அடுத்த படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தலைவர் 171 என அழைக்கப்படும் இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ் தற்போது லியோ படத்தின் பணிகளில் பிசியாக இருக்கிறார்.. இப்படத்தின் பணிகளை முடித்துவிட்டு தலைவர் 171 படத்தின் பணிகளை தொடங்க திட்டமிட்டுள்ளாராம்.. மேலும் ரஜினிகாந்த் படத்தை முடித்த பிறகே கைதி 2 படத்தின் பணிகள் தொடங்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன..

RUPA

Next Post

9 வருட காதலியை கரம்பிடிக்க குற்றவாளிக்கு பரோல் வழங்கிய ஐகோர்ட்..!! நெகிழ்ச்சி சம்பவம்..!!

Wed Apr 5 , 2023
கர்நாடக மாநிலம் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர் கொலைக் குற்றவாளி ஆனந்த். இவரது வழக்கில், முதலில் விசாரணை நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் அது உயர்நீதிமன்றத்தால் 10 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது. ஆனந்த் ஏற்கனவே 6 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவித்துவிட்டார். இந்நிலையில், ஆனந்தின் தாய் ரத்தினம்மா மற்றும் அவரின் காதலி நீதா ஆகியோர் இணைந்து, ஆனந்துக்கு பரோல் வழங்கக் கோரி மனுதாக்கல் செய்துள்ளனர். அதில், ஆனந்தை கடந்த […]
Marriage

You May Like