’தம்மாத்தூண்டு இருந்துக்கிட்டு இது பண்ற வேலைய பாருங்க’..!! நகைக்கடைக்குள் புகுந்து நெக்லஸை கவ்விச் சென்ற எலி..!!

நகைக்கடையில் புகுந்த எலி அங்கிருந்த நெக்லஸ்-ஐ லாவகமாக தூக்கிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கேரள மாநிலம் காசர்கோடு பகுதியில் பிரபல நகைக்கடை ஒன்று அமைந்துள்ளது. இந்த கடையில், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த நெக்லஸ் ஒன்று காணாமல் போயிருந்தது. இதனைப் பார்த்த ஊழியர்கள் அதிர்ச்சியடைந்து, கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது நள்ளிரவில் கடையின் சீலிங் வழியாக உள்ளே புகுந்த எலி ஒன்று அந்த நெக்லஸ்-ஐ லாவகமாக தூக்கிச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது.

இந்நிலையில், நகையை திருடும் திருடனை கவனமாக பாருங்கள் என்ற வாசகத்துடன் எலி அந்த நெக்லஸ்-ஐ தூக்கிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், மாயமான நெக்லெஸின் மதிப்பு உள்ளிட்டவை குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

CHELLA

Next Post

பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த தனியார் நிறுவன ஓட்டுநர் கைது…!

Sun Jan 29 , 2023
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் ரீதியான குற்றங்கள் அதிகரிக்க தொடங்கி இருக்கின்றன. அது ஒரு புறம் வருத்தம் அளித்தாலும், இது போன்ற தவறுகளில் ஈடுபடுவார்கள் தங்களுடைய உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் தவறு செய்தால் அவர்களால் பாதிக்கப்படுபவர்கள் விவரம் அறிந்த பெண்களாக இருந்தாலும் கூட பரவாயில்லை. ஆனால் எதுவுமே தெரியாத பள்ளிக்கு செல்லும் மாணவிகளை சீரழிப்பது எந்த விதத்திலும் நியாயம் இல்லை. ராணிப்பேட்டை மாவட்டம் பாரதி நகர் காட்டன் பஜார் தெருவை […]
Rape e1667877828212

You May Like