தமிழ்நாட்டில் கொட்டிக் கிடக்கும் காலியிடங்கள்..!! 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..!! நல்ல சம்பளம்..!!

தமிழ்நாடு அஞ்சல் துறையில் காலியாக உள்ள 3,167 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


பணியின் முழு விவரங்கள்:

பணியின் பெயர்கிராம அஞ்சல் பணியாளர் (GRAMIN DAK SEVAKS -GDS) NOTIFICATION: 17-21/2023-GDS
காலியிடங்கள்தமிழ்நாட்டில் 3,167, நாடு முழுவதும் 40,889
சம்பளம் மற்றும் படிகள்கிளை போஸ்ட் மாஸ்டர் (BPM – Branch
Postmaster BPM) – ரூ. 12,000 முதல் ரூ.29,380 வரை

உதவிக் கிளை போஸ்ட் மாஸ்டர் / அஞ்சல் பணியாளர் (Assistant Branch Postmaster – ABPM /Dak Sevak) – ரூ.10,000 முதல் ரூ.24,470 வரை
கல்வித் தகுதி10ஆம் வகுப்பு அல்லது அதற்கு சமமான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்புகுறைந்தபட்ச வயது 18, அதிகபட்ச வயது 40 (விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க நிர்ணயிக்கப்பட்ட இறுதி நாளன்று பூர்த்தியடைத்திருக்க வேண்டும்)
விண்ணப்பக் கட்டணம்பட்டியல் சாதிகள்/ பட்டியல் பழங்குடியினர்/ மாற்றுத் திறனாளிகள்/ திருநர்கள் ஆகிய பிரிவைச் சேர்ந்தவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. ஏனைய வகுப்பினர் விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும்

விண்ணப்பிப்பது எப்படி?

இந்த பதவிக்கான விண்ணப்ப செயல்முறை ஆன்லைன் மூலமாக மட்டுமே நடைபெறும். indiapostgdsonline.cept.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் தாங்கள் விண்ணப்பிக்க விரும்பும் அஞ்சல் வட்டத்தை முதலில் தேர்வு செய்ய வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட வட்டங்களில் உள்ள காலியிடங்களுக்கும் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப்ப படிவத்தில், விண்ணப்பதாரர்கள் தங்களின் கல்வித் தகுதி சான்றிதழ், வண்ண பாஸ்போர்ட் புகைப்படம் மற்றும் இதர ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி 16.02.2023 ஆகும்.

CHELLA

Next Post

”இன்னைக்கு ஆட்டம் சூடுபிடிக்கப் போகுது”..!! பதிலடி கொடுக்குமா.? பறிகொடுக்குமா.? என்ன செய்யப்போகிறது இந்தியா.?

Sun Jan 29 , 2023
இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டி20 கிரிக்கெட் போட்டி இன்று இரவு 7.00 மணிக்கு லக்னோவில் தொடங்குகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி, ஒருநாள் தொடரை 0-3 என்ற கணக்கில் இழந்தது. இதையடுத்து, இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றன. ராஞ்சியில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்தியாவை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி அபார […]
அதிரடி காட்டிய சுப்மன் கில்..!! நிலைகுலைந்த நியூசிலாந்து..!! தொடரை கைப்பற்றியது இந்தியா..!!

You May Like