இன்ஸ்டாவில் காதலித்து திருமணம்..!! 7 மாத கர்ப்பிணி மனைவியை கொன்று மலை மேலிருந்து தள்ளிவிட்ட எஸ்.ஐ. மகன்..!!

7 மாத கர்ப்பிணி மனைவியை கொடூரமான முறையில் கொலை செய்து, மலை மேலிருந்து தள்ளிவிட்ட காதல் கணவனை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வேலூர் அருகே பாலமதி மலையில் உள்ள முருகன் கோயிலுக்கு செல்லும் பாதையை ஒட்டி வனப்பகுதி அமைந்துள்ளது. அங்கிருந்து இளம்பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. விசாரணையில், அப்பெண்ணை அடித்து கொடூரமான முறையில் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அப்பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், அந்த பெண்ணை இளைஞர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் அழைத்துச் செல்லும் காட்சிகளும், சில மணி நேரம் கழித்து இளைஞர் மட்டும் தனியாக திரும்பும் காட்சிகளும் பதிவாகியிருந்தது. இதனால், சந்தேகமடைந்த போலீசார், இளைஞரின் வாகன எண்ணை வைத்து வேலூர் ஜீவாநகரை சேர்ந்த எஸ்ஐ ரமேஷின் மகன் கார்த்தியை (22) பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவருடன் பைக்கில் சென்றது சிதம்பரத்தை சேர்ந்த குணப்பிரியா (22) என்பதும், அவரை அடித்துக் கொலை செய்ததையும் ஒப்புக்கொண்டார்.


தொடர் விசாரணையில், இளைஞர் கார்த்தி சென்னை தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்த நிலையில், குணப்பிரியாவுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்துள்ளார். பின்னர் செல்போனில் பேசிய இருவரும் காதலித்து வந்துள்ளனர். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு கார்த்தி, குணப்பிரியாவை வள்ளிமலை கோயிலுக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்துள்ளார். இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்கவே, கார்த்தி மனைவியுடன் நண்பர்கள் வீட்டில் தங்கியிருந்துள்ளார். இந்நிலையில், கர்ப்பமடைந்த குணப்பிரியா மீண்டும் சென்னையில் தங்கி வேலைக்கு சென்றுள்ளார். 7 மாத கர்ப்பிணியாக இருந்த குணப்பிரியாவை கடந்த 25ஆம் தேதி பைக்கில் கார்த்திக் அழைத்துக் கொண்டு பாலமதிக்கு சென்றுள்ளார். அங்கு குணப்பிரியா, ‘வீடு வாடகைக்கு எடுத்து தங்கலாம்.. அல்லது உனது வீட்டிற்கு அழைத்துச்செல்’ என கூறியுள்ளார். இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கட்டையால் குணப்பிரியாவின் தலை மற்றும் முகத்தின் மீது கார்த்திக் சரமாரி தாக்கியுள்ளார். இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர், சடலத்தை மலையின் மேலிருந்த கீழே தள்ளிவிட்டு சென்றுள்ளார். இச்சம்பவத்தை அடுத்து கார்த்தியை கைது செய்த காவல்துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

CHELLA

Next Post

தமிழக அரசு வேலை.. 218 காலியிடங்கள்..! BSc முடித்த நபர்கள் விண்ணப்பிக்கவும்…!

Sun Jan 29 , 2023
சேலம் மாவட்ட சுகாதார ஆரம்ப சுகாதார நிலையம்‌, நகர்புற நலவாழ்வு மையத்தில் செவிலியர்‌ பணிகளுக்கு என மொத்தம் 218 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர் வயதானது அதிகபட்சம் 50 க்குள் இருக்க வேண்டும். பணிக்கு கல்வி தகுதி B.Sc நர்சிங், ஆய்வக தொழில்நுட்பம், மருத்துவ ஆய்வக தொழில்நுட்பம், அறிவியல் துறையில் டிப்ளமோ, பட்டப்படிப்பு எதாவது ஒன்று முடித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் ரூ.15,000 வரை ஊதியம் வழங்கப்படும். தகுதியின்‌ அடிப்படையில்‌ […]

You May Like