உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தனது மகனுக்காக பார்த்து நிச்சயம் செய்த பெண்ணை தானே திருமணம் செய்துக் கொண்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஷகீல் – ஷபனா தம்பதிக்கு 6 பிள்ளைகள் உள்ளனர். 55 வயதான ஷகீல் தனது 17 வயதான மகனுக்கு திருமணத்துக்காக பெண் தேடி, பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த 22 வயது பெண்ணைத் தேர்ந்தெடுத்து நிச்சயம் செய்துள்ளார். நிச்சயம் செய்த பெண்ணுடன் தனது அப்பா ஆபாசமாக வீடியோ மற்றும் ஆடியோ கால் மூலம் பழகுவதைக் கண்டுபிடித்த மகன் அதிர்ச்சியடைந்தார்.
இதனால் மகன் அந்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்துவிட்டார். சில நாட்களிலே 55 வயது நிரம்பிய ஷகீல் தனது மகனுக்கு நிச்சயம் செய்த 22 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதில் அதிர்ச்சியடைந்த மனைவி ஷபனா, இந்த விவகாரம் தொடர்பாக போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
ஷபனாவின் குற்றச்சாட்டு படி, வீட்டிலிருந்த 2 லட்சம் ரூபாய் மற்றும் 17 கிராம் தங்கத்தையும் எடுத்துச் சென்று, அந்த பெண்ணை திருமணம் செய்துள்ளார் ஷகீல். மேலும், இச்சம்பவம் பற்றி கேள்வி எழுப்பிய தனது மனைவியும், மகனையும் ஷகீல் கடுமையாக தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து ஷகீலின் 17 வயது மகன் சொல்லும்போது, “என்னுடைய பாட்டி மற்றும் தாத்தா இருவருமே, என்னுடைய அப்பாவுக்கு முழு ஆதரவாக இருக்கிறார்கள்.. அவர்கள் என் அப்பாவை கண்டிக்கவேயில்லை. அடிக்கடி அப்பா போனில் பேசியது, எனக்கு நிச்சயம் செய்த பெண்தான் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். இதை என் அம்மாவிடமும் சொன்னேன். ஆனால் அவர் அதை நம்பவேயில்லை..
இதற்கு பிறகுதான், அம்மாவுக்கும் சந்தேகம் வந்தது.. இதுகுறித்து கேட்டதற்குதான் எங்களை அப்பா, கடுமையாக தாக்கிவிட்டார்.. ஆனால், எனக்கு பார்த்த பெண்ணை திருமணம் செய்து கொள்வார் என்று யாருமே, எதிர்பார்க்கவேயில்லை” என்று தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவுகிறது.
Read more: “உங்க மேல இருந்த மரியாதையே போச்சு..” ஆபாச டான்ஸ் மூவ்.. பிரபுதேவாவை விளாசும் நெட்டிசன்கள்..