உயரம் குறைவான மாற்றுத்திறனாளிகளுக்கான தடகள போட்டி ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இயந்திய அணி சார்பில் கலந்துகொண்டுள்ள போட்டியாளர்கள், அதிலும் குறிப்பாக தமிழக வீரர்கள் பதக்கங்களை குவித்துள்ளனர்.
உசிலம்பட்டியைச் சேர்ந்த கணேசன் என்பவர்,வட்டு எறிதல், ஈட்டி எறிதல், குண்டு எறிதல் ஆகிய மூன்று போட்டிகளிலும் தங்க பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார். அதேபோல் மதுரையைச் சேர்ந்த மனோஜ் மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த செல்வராஜ் ஆகியோரும் பதக்கங்களை வென்று பெருமை சேர்த்துள்ளனர்.