அலர்ட்…!அந்தமான் கடல் பகுதிகளில் 5-ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி…!

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழ்நாடு கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், உள் தமிழ்நாடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 முதல் 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 முதல் 23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். அந்தமான் கடல் பகுதிகளில் 5-ம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

ஞாபக சக்தியை அதிகரிக்க இதனை செய்தால் போதும்..!

Thu Dec 1 , 2022
தற்சமயத்தில் பலருக்கு சிறு வயதிலேயே மறதி ஏற்பட்டு அவதிப்படுகிறார்கள். இதனை சரிசெய்ய உணவில் தனிப்பட்ட சிறப்பு கவனம் செலுத்தப்படுவது அவசியமாக உள்ளது.  உடலுக்கு மட்டுமின்றி மூளைக்கும் ஆற்றல் தேவைப்படுகிறது. நினைவாற்றலை அதிகரிப்பதற்காக சில உணவுகளை சேர்த்து கொள்ள வேண்டும். இந்த பதிவில் என்னென்ன உணவுகள் நினைவாற்றலை மேம்படுத்தும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். அன்றாட வாழ்வில் பச்சைக் காய்கறிகள் உணவில் சேர்த்துக் கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது. உடல் வளர்ச்சி […]
3 brain 1608701972

You May Like