பஞ்சாப் அணியை வீழ்த்தி 56 ரன்கள் வித்தியாசத்தில் 56 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் வெற்றிபெற்றது. ஐபிஎல் வரலாற்றில் 2வது அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.
16வது ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 31ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் 38வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது.இதையடுத்து லக்னோ முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல் மற்றும் கைல் மேயர்ஸ் களமிறங்கினர். இதில் கே.எல்.ராகுல் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். இதைதொடர்ந்து ஆயுஷ் பதோனி களமிறங்கினார். கைல் மேயர்ஸ் 24 பந்துகளில் 54 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய மார்கஸ் ஸ்டோனிஸ் அதிடியாக ஆடி 40 பந்துகளில் 72 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 5 விக்கெட் இழப்பிற்கு 257 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து, 258 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் பஞ்சாப் அணியில் முதலில் களமிறங்கிய பிரப்சிம்ரன் சிங் மற்றும் ஷிகர் தவான் வந்தவேகத்தில் சொற்ப ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இதன்பின் களமிறங்கிய அதர்வா தைடே அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அவருடன் இணைந்து பொறுப்பாக விளையாடி வந்த சிக்கந்தர் ராசா 36 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார்.
அவரைத்தொடர்ந்து, ரவி பிஷ்னோய் தான் வீசிய பந்தில் அதர்வா தைடேவின் விக்கெட்டை எடுத்தார். இந்தபின், களமிறங்கிய லிவிங்ஸ்டன் 23 ரன்கள் எடுத்து களத்தை விட்டு வெளியேறினார். இதையடுத்து பேட் செய்யவந்த சாம் கர்ரன் (21 ரன்கள்), ஜிதேஷ் சர்மா (24 ரன்கள்) பொறுப்பாக விளையாடி அணிக்கு ரன்கள் குவித்த நிலையில் தங்களது விக்கெட்டை இழந்தனர். இறுதிவரை போராடிய பஞ்சாப் அணி 201 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதனால் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக அதர்வ தைடே 66 ரன்களும், சிக்கந்தர் ராசா 36 ரன்களும், ஜிதேஷ் சர்மா 24 ரங்களும் ரன்களும், லிவிங்ஸ்டன் 23 ரன்களும், சாம் கர்ரன் 21 ரன்களும் குவித்துள்ளனர். லக்னோ அணியில் யாஷ் தாக்கூர் 4 விக்கெட்டுகளையும், நவீன் 3 விக்கெட்டுகளையும், ரவி பிஷ்னோய் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.
நடப்பு சீசனில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 234 ரன்கள் அடித்ததன் மூலம் இந்த தொடரில் அதிக ரன்களை குவித்தது சென்னை அணி. ஆனால் தற்போது, பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி 257 ரன்கள் குவித்து சென்னை அணியை முந்தியுள்ளது. குறிப்பாக ஐபிஎல் வரலாற்றில் இதுதான் 2வது அதிகபட்ச ஸ்கோர் ஆகும். ஆர்சிபி அணி 2013ல் புனே வாரியர்ஸுக்கு எதிராக அடித்த 263 ரன்கள் தான் ஐபிஎல்லின் அதிகபட்ச ஸ்கோர் ஆகும். பஞ்சாப் அணிக்கு எதிராக 257 ரன்கள் அடித்ததன் மூலம் அதிக ஸ்கோர் அடித்த 2வது அணி என்ற சாதனை படைத்தது லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி.