‘மாணவர்களை வைத்து பிண அரசியல் வேண்டாம்’ கள்ளக்குறிச்சி சம்பவத்தை மேற்கோள் கட்டிய நீதிபதி.!

சமீபகாலமாக மாணவ, மாணவிகள் மரணம் அதிகம் தொடர்ந்து வரும் நிலையில் அதனை வைத்து அரசியல் செய்வதும் நடைமுறையாகி வருகிறது.


ஏற்கனவே, கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி மாணவி வழக்கு இதற்கு பெரும் சாட்சியாக இருக்கின்ற நிலையில் மேலும் இதுபோன்று கடையநல்லூரில் இறந்த மாணவன் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் செய்து உள்ளனர்.

இது தொடர்பாக வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கில் மாணவர்களின் பிணத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி அறிவுரை அளித்துள்ளார்.

இறந்த மாணவனின் உடலை நாளை காலைக்குள் பெற்றோர் வாங்கி கொள்ள வேண்டும், அதனை மீறி உடலை வாங்க தவறினால் மீண்டும் இதனில் கலவரம் மற்றும் போராட்டம் நீடிக்குமானால் மாவட்ட நிர்வாகம் இறுதி காரியங்களை செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

1newsnationuser5

Next Post

சாதி மாறி திருமணம் செய்த கர்ப்பிணி பெண்ணின் கருவை கலைத்து கிராமத்தினர் அட்டூழியம்.!

Thu Oct 20 , 2022
ஸ்ரீ ஹரி என்பவர் ஆந்திர மாநிலம் திருப்பதி பழைய வீராபுரத்தில் வசித்து வருகிறார். இவர் லீலாவதி என்ற பெண்ணை விரும்பி காதலித்து திருமணம் செய்து கொண்டார். மாமியார் வீட்டில் இருந்து வந்த லீலாவதியை அவரது பெற்றோர் தங்கள் வீட்டிற்கு அழைத்து வந்தனர். அந்த தருணத்தில், சாதி மாறி திருமணம் செய்து கொண்டதால் கிராம மக்கள் லீலாவதியின் பெற்றோர் வீட்டை முற்றுகையிட்டு ரகளை செய்தனர் . மேலும் லீலாவதி மற்றும் அவரது […]
bigstock Silhouette Of Pregnant Young L 1200x

You May Like