சென்னையில் இயங்கி வரும் பிரபலமான சரவணா ஸ்டோர்ஸ் கடைக்கு தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் கிளைகள் இருக்கின்றன. மதுரையின் மாட்டுத்தாவணியில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் கடையின் ஒன்பதாவது மாடியில் சற்றுமுன் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கடையில் ஏற்பட்ட தீ விபத்தை தொடர்ந்து வாடிக்கையாளர்கள் மற்றும் கடையில் வேலை செய்பவர்கள் அனைவரும் அவசரமாக கடையிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து தீயணைப்பு வாகனங்கள் கடையில் ஏற்பட்ட தீயை அணைக்க கடுமையாக போராடி வருகின்றனர். எந்த காரணத்தினால் தீ விபத்து ஏற்பட்டது என தெரியவில்லை. அவசர தேவைகளுக்காக ஆம்புலன்ஸ் வாகனங்களும் வரவழைக்கப்பட்டுள்ளன. இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். மதுரை சரவணா ஸ்டோர்ஸில் ஏற்பட்ட தீ விபத்து அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.