மதுரை அருகே…..! ஆட்டோவில் இருந்து பெண்ணை கீழே தள்ளிவிட்டு நகையை பறித்த 2 பேர் கொண்ட கும்பல்….!

தென்காசி மாவட்டம் புளியங்குடியைச் சேர்ந்த இப்ராஹிம் என்பவரின் மகள் ரபீனா (24). மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் இருக்கின்ற ஒரு ஐடி நிறுவனத்தில் இவர் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன் தினம் மாலை வேலை முடிந்து மேலூர் பைபாஸ் சாலையில் ஆட்டோவில் ஏறி பயணித்துக் கொண்டிருந்தார் வழியில் 2 ஆண்கள் அந்த ஆட்டோவில் ஏறி உள்ளனர்.


சிறிது தூரம் சென்ற நிலையில், அவர்கள் இருவரும் ரபீனா அணிந்திருந்த 3 சவரன் நகையை பறித்துள்ளனர். அதன் பிறகு அவரை கீழே தள்ளிவிட்டு தப்பிச்சென்று விட்டனர். காயமடைந்த ரபீனா மாட்டு தாவணி காவல் நிலையத்தில் புகார் வழங்கினார். அதன் பெயரில் காவல்துறையினர் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட ஆட்டோ பதிவு எண்ணை கண்டறிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Post

திருப்பூர் அருகே கல்குவாரியில் வெடி விபத்து…..! வட மாநில தொழிலாளி உயிரிழப்பு….!

Fri Jun 9 , 2023
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கோடங்கிபாளையத்தில் ஏராளமான கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன இந்த நிலையில் அந்த பகுதியில் இருக்கின்ற குவாரி ஒன்றில் ஒடிசா மாநிலம் பக்கராவை சேர்ந்த பபன் சிங்(46) நெல்லை மாவட்டம் செண்டமங்கலத்தை சேர்ந்த மதியழகன்(47) உள்ளிட்டோர் தொழிலாளர்களாக பணியாற்றியிருந்தனர். இந்த நிலையில், நேற்று அதிகாலை 5 மணி அளவில் வெடி வைப்பதற்காக குழி தோண்டும் பணியில் இருவரும் ஈடுபட்டனர். அப்பொழுது ஏற்கனவே வைத்திருந்த ரெடி என்று உதித்தது […]
kal kuvari

You May Like