முப்பெரும் தேவிகளில் ஒருவராக பேற்றப்படும் திருமகள், மகாலட்சுமி என பலராலும் போற்றப்படுகிறாள். மகாலட்சுமியின் எந்த வடிவத்தை வழிபட்டாலும் மகாலட்சுமியின் பரிபூரணமான அருள் நமக்கு கிடைக்கும். மகாலட்சுமியின் அருளை பெற்று விட்டால் மற்ற எட்டு லட்சுமிகளும் நம்மை தேடி வருவார்கள். பொதுவாக நவராத்திரி காலத்தில் தான் மத்தியில் வரும் 3 நாட்களும் மகாலட்சுமியை அதிகமானவர்கள் வழிபடுவார்கள். ஆனால் அதற்கு முன் ஆவணி மாதத்தில் அவரை வழிபடுவது மிக முக்கியமானதாகும்.
மகாலட்சுமிக்கு இருக்கப்படும் பல விதமான விரதங்களில் மிக முக்கியமானதும், மிக நீண்ட நாட்கள் இருக்கப்படும் விரதம் ஆவணி மாத வளர்பிறை துவங்கி, புரட்டாசி மாத தேய்பிறை வரை 16 நாட்கள் இருக்கும் விரதம் ஆகும். அஷ்டமியில் துவங்கி, மீண்டும் அஷ்டமியிலேயே நிறைவு செய்ய வேண்டிய இந்த விரதத்தை எப்படி இருப்பது என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
மகாலட்சுமியின் அருளை பெறுவதற்காக கடைபிடிக்கப்படும் மிக முக்கியமான விரதம் மகாலட்சுமி விரதமாகும். விநாயகர் சதுர்த்திக்கு பிறகு வரும் நான்காவது நாள் துவங்கி, 16 நாட்கள் கடைபிடிக்கப்படும். அதாவது ஆவணி மாத வளர்பிறை அஷ்டமி திதி துவங்கி, புரட்டாசி மாத தேய்பிறை அஷ்டமி திதி வரை உள்ள 16 நாட்களும் மகாலட்சுமிக்கு உரிய வழிபாட்டு நாட்களாகும். இந்த நாட்களில் விரதம் இருந்து மகாலட்சுமியை வழிபட்டால் அவர்களின் செல்வ வளம், அதிர்ஷ்டம், அழகு, பலம் ஆகிவை அதிகரிக்கும். தங்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இருக்க பெண்கள் அதிகம் இந்த விரதத்தை கடைபிடிக்கிறார்கள்.
இந்த ஆண்டு மகாலட்சுமி விரதம் இன்று (ஆகஸ்ட் 31ம் தேதி) ஞாயிற்றுக் கிழமை துவங்கி, செப்டம்பர் 14ம் தேதி செவ்வாய்கிழமை வரை கடைபிடிக்கப்பட உள்ளது. இந்த நாட்களில் மகாலட்சுமியை வழிபட்டால் மகிழ்ச்சி, செல்வளம் சேருவதுடன், பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் நீங்குவதற்கு மகாலட்சுமி அருள் செய்வாள் என்பது நம்பிக்கை. பாத்ரபாத சுக்ல அஷ்டமி திதி முதல் அஷ்வின் கிருஷ்ணாஷ்டமி வரை மகாலட்சுமி விரதம் அனுசரிக்கப்படுகிறது. லட்சுமி தேவியை 16 தேதிகளில் சடங்குகளுடன் வழிபடுகிறார்கள். அதன் சக்தியால் ஏழை கூட பணக்காரர் ஆகிறார் என்று நம்பப்படுகிறது. பொருளாதார நிலை மேம்படும்.
மகாலட்சுமி விரதம் 2025 முகூர்த்தம்: இது ஆகஸ்ட் 30, 2025 அன்று பாத்ரபாத மாத சுக்ல பக்ஷத்தின் அஷ்டமி திதியில் இரவு 10.46 மணிக்குத் தொடங்கி மறுநாள் அதாவது செப்டம்பர் 1, 2025 அன்று அதிகாலை 12.57 மணிக்கு முடிவடையும். இந்த விரதம் செல்வம் மற்றும் செழிப்புக்குக் காரணமான மகாலட்சுமியின் மகிழ்ச்சி மற்றும் ஆசிர்வாதத்திற்காகக் கடைப்பிடிக்கப்படுகிறது. ஏதேனும் காரணத்தால் 15 நாட்கள் விரதம் இருக்க முடியாவிட்டால், இந்த விரதத்தின் முதல் 3 நாட்கள் அல்லது கடைசி 3 நாட்கள் சில நாட்களுக்கு விரதம் இருக்க முடியும்.
மகாலட்சுமி விரதம் முறைகள் :மகாலட்சுமி விரதம் இருப்பவர்கள் சூரிய உதயத்திற்கு முன் எழுந்து குளித்து விட வேண்டும்.
மகாலட்சுமியின் படம், பூஜைக்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் முதல் நாளே சேகரித்து தயார் செய்து வைத்து விட வேண்டும்.
மகாலட்சுமிக்கு வஸ்திரம், வெற்றிலை பாக்கு, தேங்காய், சந்தனம், வாசனை மலர்கள், அரிசி, பழங்கள் போன்றவற்றை படைத்து வழிபட வேண்டும். முடிந்தவர்கள் 16 வகையான பொருட்கள் படைத்து வழிபடலாம்.
ஒரு கலத்தில் தண்ணீர் நிரப்பி, அதன் மீது தேங்காய் வைத்து, மகாலட்சுமியின் படத்திற்கு அருகில் வைத்து விட வேண்டும்.
நெய் விளக்கேற்றி, ஏதாவது ஒரு இனிப்பு நைவேத்தியமாக படைத்து, மகாலட்சுமிக்கு ஆரத்தி காட்டி வழிபடவேண்டும். நம்முடைய வழிபாட்டில் ஏதாவது குறைகள், தவறுகள் இருந்தால் அதை மன்னிப்பு, அருள் செய்ய வேண்டும் என மகாலட்சுமியை வேண்டிக் கொள்ள வேண்டும்.
16 நாட்கள், செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமியை வேண்டி விரதம் இருந்து, வழிபடுவதால் செல்வ வளம் அதிகரிக்கும். வாழ்க்கையில் இருக்கும் அனைத்து விதமான பிரச்சனைகளும் நீங்கும். இந்த நாட்களில் மகாலட்சுமிக்கு நாம் படைக்கும் ஒவ்வொரு பொருளும் நமக்கு வெற்றி மேல் வெற்றியை தந்து கொண்டே இருக்கும். பெருமாளுக்குரிய புரட்டாசி மாதத்தில் மகாலட்சுமியை வழிபடுவதால் பெருமாளின் நிறைவான அருளும் நமக்கு கிடைக்கும். அதோடு புண்ணியம் தரும் புரட்டாசி மாதத்தில் விரதம் இருந்த நற்பலனும் நமக்கு கிடைக்கும். இந்த 16 நாட்களும் மகாலட்சுமிக்குரிய மந்திரங்களை சொல்லுவதாலும், கேட்பதாலும் மகாலட்சுமி மனம் மகிழ்ந்து நம்முடன் நிரந்தரமாக வாசம் செய்வாள் என்பது நம்பிக்கை.