“ஒரு பொண்ணு இப்டி இருக்க கூடாது.” பெண் பத்திரிக்கையாளரை அவமதித்த சமூக ஆர்வலர்.!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் சமூக ஆர்வலர் சம்பாதி பிடே என்பவர் முதல்வர் ஏக் நாத் சிண்டேவை சந்தித்த பின்னர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது ஒரு பெண் பத்திரிக்கையாளர் அவரிடம் கேள்வி எழுப்ப, “பெண் என்பவள் பாரதமாதாவுக்கு ஈடானவள். அவள் பொட்டு வைக்காமல் விதவை போல இருக்கக் கூடாது.” என்று தெரிவித்துள்ளார்.


மேலும், அவருக்கு பேட்டி அளிக்க அவர் மறுத்துள்ளார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து அவருக்கு எதிராக மகாராஷ்டிரா மாநில மகளிர் ஆணைய தலைவி நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்.

அந்த நோட்டீசில், “உங்களது கூற்றானது ஒரு பெண்ணின் சமூக அந்தஸ்தை மற்றும் பெருமையை இழிவுபடுத்தும் விதமாக இருக்கிறது. பொட்டு வைப்பது என்பது அவரவர் விருப்பம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புனே அருகே இருக்கும் ஒரு கிராமத்தில் தலித் மற்றும் மராட்டா சமூகங்களுக்கு இடையேயான வன்முறை வெடித்தது. அப்பொழுது சமூக ஆர்வலர் பிடே மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால் இந்த வழக்கின் குற்ற பத்திரிக்கையில் பிடேவின் பெயர் இடம்பெறவில்லை.

1newsnationuser5

Next Post

பழனிசாமி To பாஜக.. புகழேந்தி கொடுத்த அதிர்ச்சி ரிப்போர்ட்.!

Sat Nov 5 , 2022
ராசிபுரம் அருகே தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்த புகழேந்தி, ” சென்னையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மழை நீர் வடிகால் வாரியம் அமைக்க ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டன. அந்த நிதியை பற்றி திமுக தலைவர் ஸ்டாலின் விசாரிப்பாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் கன மழையால் சென்னை பெருநகரம் முழுவதும் வெள்ளதில் மூழ்கி, மழை நீரால் அனைத்து பகுதியும் சூழ்ந்தது. சென்னை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் […]
eps pugalendhi

You May Like