மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டத்தில் தேபால்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பாபு சௌத்திரி. இவர் விவசாய தொழில் செய்து வருகின்ற நிலையில், இவருடைய மகன் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கிறார். அடிக்கடி பணம் கேட்டு இவருடைய தந்தையுடன் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 15 ஆம் தேதி இன்றைய செலவுக்காக 2000 ரூபாய் பணம் வேண்டும் என்று சோகன் தெரிவித்துள்ளார்.
ஆனால் பாபு சவுத்ரி வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது இந்த தகராறு ஏற்பட்டிருக்கிறது என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில்தான் தந்தை பணம் கொடுக்கவில்லை என்று சோகனுக்கு தன்னை மீறி ஆத்திரம் ஏற்பட்டதை தொடர்ந்து, வயலில் இருந்த பாராங்கல்லில் தன்னுடைய தந்தையின் தலையை மோதி அடித்து கொடூரமான முறையில் கொலை செய்திருக்கிறார் சோகம் பின்னர் உடலை அப்புறப்படுத்தி விடலாம் என்று அவர் திட்டமிட்ட நிலையில், மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்ததால் அங்கு இருந்து தப்பிச் சென்றார்.
இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர் வயலில் பிணமாகக் கடந்த பாபு சௌத்ரியின் உடலை மீட்பு பிரயோக பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கொலையாளியான மகன் சோகம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக அந்த பகுதியில் காவல்துறை கண்காணிப்பாளர் ஹிதிகா வாசல் தெரிவித்துள்ளார்.