மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருக்கின்ற சகிநகா பகுதியை சேர்ந்த பஞ்ச ஷீலா(30) இவருக்கும் உல்ஷா நகர் பகுதியைச் சேர்ந்த தீபக் என்பவருக்கும் கடந்து சில வருடங்களாக வழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், இருவரும் நாளடைவில் காதலிக்க தொடங்கினர். ஆனால் சமீப காலமாக அது மோதலாக மாறி இருக்கிறது.
தீபக் ஓட்டுனராக பணிபுரிந்து வருகின்ற நிலையில், இருவரின் திருமணத்திற்கு பஞ்சசீலா குடும்பத்தினர் சம்மதம் தெரிவிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இது தொடர்பாக தீபக் மற்றும் பஞ்ச ஷீலா இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டிருக்கிறது. எத்தகைய நிலையில் நேற்று முன்தினம் கட்கோபர் பகுதியில் இருந்த பஞ்ச ஷீலாவை பார்ப்பதற்காக தீபக் சென்றுள்ளார் அங்கிருந்து இருவரும் பஞ்சசீலா வசிக்கும் பகுதிக்கு ஆட்டோவில் வந்துள்ளனர் இது மாலை 4 மணி அளவில் நடைபெற்றிருக்கிறது.
ஆட்டோவில் இருவரும் தன்னுடைய சொந்த விவகாரங்கள் தொடர்பாக பேசும்போது அது தகராறாக மாறி இருக்கிறது. ஒரு கட்டத்தில் ஆத்திரம் கொண்ட தீபக் தன்னிடம் இருந்த கூரிய ஆயுதம் ஒன்றை எடுத்து பெண்ணின் கழுத்தை அறுத்துள்ளார் இந்த நிலையில் தத்நகர் என்ற பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்ற நிலையில், ஆட்டோவில் இருந்து இருவரும் வெளியே விழுந்துள்ளனர். அந்தப் பெண்ணை அப்படியே விட்டுவிட்டு தீபக் அங்கிருந்து தப்பி சென்றார்.
அதற்குள் அங்கிருந்த மக்கள் அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர் இது தொடர்பாக காவல்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில், ராஜாவாடி பகுதியில் பதுங்கி இருந்த கொலையாளி தீபக்கை காவல்துறையினர் பிடித்தனர்.
தீபக் தற்கொலை செய்வதற்கு முயற்சி செய்ததால் அவர் காயமடைந்த நிலையில் அவருக்கு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டு, மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டிருக்கிறது. இந்த வழக்கில் ஆட்டோ ஓட்டுனர் முக்கிய சாட்சியமாக இருக்கிறார் கொலை வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சிகிச்சை முடிந்தபின் தீபக்கை விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.