கள்ளக்காதலனுடன் சேர்ந்து, பெண் செய்த காரியம்.. போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கை..

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா நாமகிரிப்பேட்டை அருகே உள்ள தண்ணீர்பந்தல் காட்டை சேர்ந்தவர் 52 வயதான கண்ணன். சேகோ பேக்டரி வைத்து நடத்தி வரும் இவருக்கு வயதான பெற்றோர் உள்ளனர். அவர் தனது பெற்றோரை கவனித்துக் கொள்வதற்காக திருவாரூரை சேர்ந்த 27 வயதான கனிமொழி என்ற பெண்ணை வேலைக்கு வைத்துள்ளார். தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் கனிமொழி, முதியவர்களுடன் வசித்து அவர்களை கவனித்து வந்துள்ளார்.

இந்நிலையில், கண்ணனின் பெற்றோர் வீட்டிலிருந்த 12 பவுன் தங்க நகையை காணவில்லை. இதனால் கனிமொழி மீது சந்தேகம் அடைந்த கண்ணன், இது குறித்து நாமகிரிப்பேட்டை போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கனிமொழி நகையை திருடி அவரது கள்ளக்காதலனான மோகனிடம் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கொடுத்து வைத்தது தெரியவந்துள்ளது.

இதையடுத்து, போலீசார் தஞ்சாவூரில் இருந்த மோகனை பிடித்து, அவரிடம் இருந்த 12 பவுன் நகைகளை மீட்டனர். தொடர்ந்து கனிமொழி மற்றும் அவரது காதலன் மோகன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

Maha

Next Post

ஆண்களே கவனம்!! வாலிபருக்கு மயக்க மருந்து கொடுத்து, பெண் செய்த காரியம்..

Sat Oct 14 , 2023
அரியானாவின் குருகிராம் பகுதியை சேர்ந்தவர் ரோகித் குப்தா. ஆன்லைனில் டேட்டிங் ஆப் மூலம் சாக்சி என்ற இளம் பெண் ஒருவருடன் இவர் பழகியுள்ளார். இந்நிலையில், இருவரும் பல நாட்களாக சாட்டிங் செய்து வந்துள்ளனர். ரோகித் குப்தாவுடன் பேசி வந்த சாக்சி, தனது சொந்த ஊர் டெல்லி என்றும், குருகிராமில் உள்ள தனது உறவினர் வீட்டில் தான் வசித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, […]
பாலியல் உறவு திருப்தியாக இல்லையா..? இந்த புதிய முயற்சியை ட்ரை பண்ணி பாருங்க..!!

You May Like