மாண்டஸ் புயல் சென்னையிலிருந்து 170கிமீ தொலைவில் தென்-தென்கிழக்கே மையம் கொண்டுள்ளது. இந்த மாண்டஸ் புயல் கடந்த 06 மணி நேரத்தில் மணிக்கு 14 கிமீ வேகத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. இந்த புயல் இன்று நள்ளிரவு கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அதிகபட்சமாக 85கிமீ வேகத்தில் காற்று வீசப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாண்டஸ் புயல் நெருங்கி வருவதால், காற்றின் வேகம் எந்த இடத்தில் அதிகமாக இருக்கிறதோ அந்த இடத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாண்டஸ் புயல் ஏற்படுத்தும் பாதிப்புகளை சரிசெய்ய 11 ஆயிரம் மிவ்வாரிய ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போல மழை மற்றும் புயல் சமயங்களில் பொது மக்கள் நலனுக்காக மின்சராம் துண்டிக்கப்படுவது வழக்கமான ஒன்று தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.