#MANDOUS : மக்களே உஷார்!!! மின்சாரம் துண்டிக்கப்படும் – மின்வாரியம் தகவல்

மாண்டஸ் புயல் சென்னையிலிருந்து 170கிமீ தொலைவில் தென்-தென்கிழக்கே மையம் கொண்டுள்ளது. இந்த மாண்டஸ் புயல் கடந்த 06 மணி நேரத்தில் மணிக்கு 14 கிமீ வேகத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. இந்த புயல் இன்று நள்ளிரவு கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அதிகபட்சமாக 85கிமீ வேகத்தில் காற்று வீசப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் மாண்டஸ் புயல் நெருங்கி வருவதால், காற்றின் வேகம் எந்த இடத்தில் அதிகமாக இருக்கிறதோ அந்த இடத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாண்டஸ் புயல் ஏற்படுத்தும் பாதிப்புகளை சரிசெய்ய 11 ஆயிரம் மிவ்வாரிய ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போல மழை மற்றும் புயல் சமயங்களில் பொது மக்கள் நலனுக்காக மின்சராம் துண்டிக்கப்படுவது வழக்கமான ஒன்று தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsnation_Admin

Next Post

வெளியானது துணிவு படத்தின் "சில்லா சில்லா" பாடல்!!!

Fri Dec 9 , 2022
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘துணிவு’. இவர்கள் கூட்டணியில் உருவாகி இருக்கும் 3-வது படம் இது. இந்த படம் வங்கி கொள்ளையை மையமாக வைத்து தயாராவதாக ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், உண்மையான சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் கதை என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை […]
thunivu6

You May Like