அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் வெயில் கொளுத்தும்..!! – வானிலை ஆய்வு மையம்

tempreture

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பரவலாக பெய்து வந்த நிலையில் அடுத்த 2 நாட்களுக்கு வெயில் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.


இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தொடங்கி ஜூன்.26ம் தேதி வரை, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கை பொறுத்த அளவில், இன்று முதல் ஜூன்.22ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவையில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு, எனினும் ஒருசில இடங்களில் சற்று உயரக்கூடும்.

இன்று முதல் ஜூன்.22ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3 செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் இந்த தேதிகளில் அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.

இன்று (20-06-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். நாளை (21-06-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38-39″ செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

தமிழக கடலோரப்பகுதிகளை பொறுத்த வரை, இன்று எச்சரிக்கை ஏதுமில்லை. நாளை மற்றும் நாளை மறுதினம் (ஜூன்.21, 22) தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ஜூன்.23 மற்றும் 24ம் தேதிகளில் எச்சரிக்கை ஏதுமில்லை.” என தெரிவிக்கப்பட்டது.

Read more: கழிவை அள்ளும் தங்க கைகள்.. பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படாத அவலம்..!! கருணை காட்டுமா அரசு..?

Next Post

இதை எதிர்பார்க்கலைல.. ஈரான் கையில் எடுத்த பேரழிவு ஆயுதம்.. சமாளிக்க முடியாமல் திணறும் இஸ்ரேல்..

Fri Jun 20 , 2025
ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடந்து வரும் மோதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.. இரு நாடுகளும் மாறி மாறி ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றன. ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா கமேனியை அழிப்பதாக இஸ்ரேல் அச்சுறுத்தியுள்ளது. ஆனால் அதே நேரத்தில் ஈரான் சமீபத்தில் ஒரு இஸ்ரேலிய மருத்துவமனையை ஒரு கொடிய கிளஸ்டர் குண்டால் தாக்கியுள்ளது. கிளஸ்டர் குண்டு என்றால் என்ன? கிளஸ்டர் குண்டு என்பது ஒரு […]
israel

You May Like