திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பாப்பம்பட்டி எஸ் கே சி நகரை சேர்ந்தவர் துறை என்கின்ற திருமூர்த்தி கட்டிட தொழிலாளியான இவர் தன்னுடைய மனைவி மாலதியுடன் காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்று கூறப்படுகிறது. இந்த தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். கணவன் துரை அடிக்கடி குடித்துவிட்டு மதுபோதையில் வந்து மனைவியிடம் சண்டையிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது.
இத்தகைய நிலையில், நேற்று மதியம் ஏற்பட்ட குடும்ப பிரச்சனையின் காரணமாக, மனைவி மாலதியின் தலையில் கணவன் துரை கல்லைப்போட்டு கொலை செய்துவிட்டு 2 குழந்தைகளுடன் தப்பிச் சென்று விட்டார் அருள் வசித்து வந்தவர்கள். இரவு வெகு நேரம் ஆன பின்னரும் வீட்டில் மின்விளக்குகள் எறியாததால் வீட்டை திறந்து உள்ளே சென்று பார்த்துள்ளனர் அப்போது மாலதி உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார்.
உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை மாலதியின் உடலை மீட்டு பழனி அரசு மருத்துவமனைக்கு உரிய பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தப்பி சென்றவரை தீவிரமாக தேடி வந்தனர் இந்த நிலையில் தான் தலைமறைவாக இருந்த கணவன் கைது செய்யப்பட்டார்.