மொத்தமாக அடித்து செல்லப்பட்ட கிராமம்..! பலர் மாயம்..! மிகப்பெரிய மேக வெடிப்பு..! பதைபதைக்க வைக்கும் வீடியோ..

uttarkashi cloudburst 1754384541308 1754384553929

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.. அந்த வகையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த 3 நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.. இதனால் அம்மாநிலம் முழுவதும் வெள்ளாக்காடாக காட்சியளிக்கிறது.. அம்மாநிலத்திற்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது..


இந்த நிலையில் உத்தரகாண்டின் உத்தர்காஷியில் உள்ள ஹர்சில் அருகே உள்ள தாராலி பகுதியில் இன்று ஏற்பட்ட ஒரு மிகப்பெரிய மேக வெடிப்பில் ஒரு கிராமம் வெள்ளத்தில் மூழ்கியது.. இதில் பலர் காணாமல் போயிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

உத்தர்காஷி காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தாராலியில் ஹர்சில் பகுதியில் உள்ள கீர் காத் ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், “தாராலியில் ஏற்பட்ட சேதம் குறித்த அறிக்கைகள் காவல்துறை, துணைப் பேரிடர் மீட்புப் படை, ராணுவம் மற்றும் பிற பேரிடர் மீட்புக் குழுவினரை நிவாரண மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தியுள்ளன” என்று தெரிவித்துள்ளது..

மேக வெடிப்பின் பயங்கரமான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.. இதில் வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவதை பார்க்க முடிகிறது..

அவசர சேவை அதிகாரிகளும் குழுக்களும் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக உத்தரகாண்ட் காவல்துறை தெரிவித்துள்ளது. இதனிடையே உத்தரகண்ட் முழுவதும் பரவலாக மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது.

ராஜேஷ் பன்வார் என்ற கிராமவாசி இதுகுறித்து பேசிய போது “ இடிபாடுகளுக்கு அடியில் சுமார் 10-12 பேர் புதைந்திருக்கலாம் என்றும், 20-25 ஹோட்டல்கள் மற்றும் தங்குமிடங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்றும் கூறினார்.

உத்தரகண்டில் இந்த பருவமழையால் பலத்த மழை பெய்து வருகிறது, வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது.. ஹல்த்வானி அருகே பக்ரா ஓடையின் வலுவான நீரோட்டத்தில் ஒருவர் அடித்துச் செல்லப்பட்டார்..

இரவு முழுவதும் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக, ருத்ரபிரயாகில் உள்ள மலைப்பகுதியில் இருந்து விழுந்த இடிபாடுகள் மற்றும் பாறைகளுக்கு அடியில் இரண்டு கடைகள் புதைந்துள்ளதாக மாநில அவசர செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

மாநிலத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அனைத்து மாவட்ட நீதிபதிகளும் தங்கள் முழு குழுக்களுடன் களத்தில் இருக்குமாறு உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி உத்தரவிட்டார். கனமழை காரணமாக சாலைகள் தடைபட்டால், அவற்றை மீண்டும் இயக்க விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தாமி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

குடிநீர் மற்றும் மின்சாரக் கம்பிகள் சேதமடைந்தால், அதை விரைவில் செயல்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்று அவர் மேலும் கூறினார். தண்ணீர் தேங்கும் பிரச்சினைகளைச் சமாளிக்க அனைத்து ஏற்பாடுகளையும் மாற்று ஏற்பாடுகளையும் முன்கூட்டியே செய்ய வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டார்…

Read More : பில் கட்டாமல் இருக்க, வெஜ் பிரியாணியில் எலும்பை வைத்த இளைஞர்கள்.. கேமராவில் வசமாக சிக்கினர்.. வைரல் வீடியோ..

RUPA

Next Post

ChatGPT பயன்படுத்துவதால் மனித மூளைக்கு பாதிப்பு.. 47% சிந்தனை ஆற்றல் குறையும்..!! - ஆய்வில் தகவல்

Tue Aug 5 , 2025
Using ChatGPT can damage the human brain.. 47% decrease in thinking ability..!! - Study reveals
ChatGPT 1

You May Like