₹.300 ரூபாய்க்காக.. தம்பி கொலை.. வெளியான பகீர் காரணம்.!

மத்திய பிரதேசத்தில் உள்ள பெதள் மாவட்ட பகுதியில் வெறும் 300 ரூபாய்க்காக இரு சகோதரர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு கொலை அரங்கேறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ரமேஷ் ககோடியா எனும் நபர் தனது சகோதரரின் மனைவிக்கு கடனாக 300 ரூபாயை கொடுத்து இருக்கின்றார். இதன் காரணமாக ரமேஷ் மற்றும் அவரது சகோதரர் சுமன் சிங் ககோடியா இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் குழாயை எடுத்து தாக்கிக் கொள்ளும் அளவிற்கு சென்றுள்ளது.

இதில் ரமேஷின் தம்பி சுமன் சிங் ககோடியா பலத்த காயம் அடைந்துள்ளார். இதனை தொடர்ந்து, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சுமன் துடிதுடித்து உயிரிழந்து விட்டார்.

இந்த தகராறு நடைபெற்ற போது சுமன் மற்றும் ரமேஷ் இருவருமே நல்ல போதையில் இருந்துள்ளனர். தம்பியை கொலை செய்துவிட்டு அண்ணன் ரமேஷ் தலைமறைவாகியுள்ள நிலையில் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது

1newsnationuser5

Next Post

மீண்டும் சோகம்.. திருமண மேடையில்., வைத்தே பெண்ணுக்கு அரங்கேறிய கொடூரம்.!

Sat Dec 17 , 2022
தற்போது விளையாட்டு வீரர்கள், நாடகக் கலைஞர்கள், நடன கலைஞர்கள் பலரும் மேடையிலேயே உயிரிழக்கும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. வட மாநிலங்களில் இந்த நிகழ்ச்சியானது தொடர்ந்து வருகிறது. அந்த வகையில் மத்திய பிரதேசத்தில் சியோனி மாவட்டத்தில் உள்ள பக்காரி எனும் கிராமத்தில் திருமண வைபவம் ஒன்றில் நான்கு பெண்கள் சேர்ந்து நடனமாடி இருக்கின்றனர். இந்த நான்கு பெண்களில் ஒரு பெண் நடனமாடும் போது திடீரென்று மேடையில் சரிந்து விழுந்தார். உடனடியாக […]
Screenshot 20221217 115330 178

You May Like