மே 5ஆம் தேதி தமிழகத்தில் உள்ளூர் விடுமுறை..!! மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு..!!

தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள மங்கலதேவி கண்ணகி கோயில் சித்திரை முழு நிலவு விழா வரும் மே 5ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா உத்தரவிட்டுள்ளார்.


குமுளி அருகே உள்ள மங்கலதேவி கண்ணகி கோவில் சித்திரை முழுநிலா விழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். வரலாற்று சிறப்புமிக்க இந்த கோயிலுக்கு சித்ரா பௌர்ணமி திருவிழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். இந்த ஆண்டு விழா நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டது. தமிழக-கேரள மலைப்பகுதியில் இக்கோவில் அமைந்துள்ளதால் கோவில் திருவிழா நடைபெறுவதற்கு முன் முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், கண்ணகி அறக்கட்டளை நிர்வாகிகள் தேனி மற்றும் இடுக்கி மாவட்ட ஆட்சியர், இரு மாநில வனத்துறை அதிகாரிகள் உட்பட பல அதிகாரிகள் கொண்டனர். இதில், கோவில் திருவிழா கொண்டாடப்படுவதற்கான பல முக்கிய முடிவு எடுக்கப்பட்டு ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.

இதையடுத்து, இந்த ஆண்டு மே 5ஆம் தேதி கண்ணகி கோவில் சித்திரை முழு நிலவு விழா நடைபெற உள்ளது. இந்நிலையில், தேனி மாவட்டத்தில் கண்ணகி கோவில் சித்திரை முழுநிலவு விழா கொண்டாடப்பட உள்ள தினமான மே 5ஆம் தேதி தேனி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா உத்தரவிட்டுள்ளார். இந்த விடுமுறையினை ஈடுசெய்யும் வகையில் மே 20ஆம் தேதி சனிக்கிழமை அன்று பணி நாளாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

CHELLA

Next Post

மீண்டும் மின் கட்டணம் உயர்வு..!! எவ்வளவு தெரியுமா..? நுகர்வோர்கள் கடும் அதிர்ச்சி..!!

Thu Apr 27 , 2023
ராஜஸ்தான் மாநிலத்தில் மீண்டும் மின் கட்டணம் யூனிட்டுக்கு 45 பைசா உயர்த்தப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே கடந்த மாதம் 30 பைசா உயர்த்தப்பட்டதால், இந்த ஒரு மாத காலத்தில் மட்டும் மின் கட்டணம் ஒரு யூனிட்டுக்கு 75 பைசா உயர்ந்துள்ளது. இதனால் நுகர்வோர் ரூ. 1000 முதல் ரூ.2000 வரை கூடுதலாக செலுத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. நிலக்கரி மற்றும் நிலக்கரியை சுத்தம் செய்வதற்கான அதிக செலவு […]
Electric

You May Like