தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள மங்கலதேவி கண்ணகி கோயில் சித்திரை முழு நிலவு விழா வரும் மே 5ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா உத்தரவிட்டுள்ளார்.
குமுளி அருகே உள்ள மங்கலதேவி கண்ணகி கோவில் சித்திரை முழுநிலா விழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். வரலாற்று சிறப்புமிக்க இந்த கோயிலுக்கு சித்ரா பௌர்ணமி திருவிழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். இந்த ஆண்டு விழா நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டது. தமிழக-கேரள மலைப்பகுதியில் இக்கோவில் அமைந்துள்ளதால் கோவில் திருவிழா நடைபெறுவதற்கு முன் முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், கண்ணகி அறக்கட்டளை நிர்வாகிகள் தேனி மற்றும் இடுக்கி மாவட்ட ஆட்சியர், இரு மாநில வனத்துறை அதிகாரிகள் உட்பட பல அதிகாரிகள் கொண்டனர். இதில், கோவில் திருவிழா கொண்டாடப்படுவதற்கான பல முக்கிய முடிவு எடுக்கப்பட்டு ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.
இதையடுத்து, இந்த ஆண்டு மே 5ஆம் தேதி கண்ணகி கோவில் சித்திரை முழு நிலவு விழா நடைபெற உள்ளது. இந்நிலையில், தேனி மாவட்டத்தில் கண்ணகி கோவில் சித்திரை முழுநிலவு விழா கொண்டாடப்பட உள்ள தினமான மே 5ஆம் தேதி தேனி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா உத்தரவிட்டுள்ளார். இந்த விடுமுறையினை ஈடுசெய்யும் வகையில் மே 20ஆம் தேதி சனிக்கிழமை அன்று பணி நாளாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.