மெகா வேலைவாய்ப்பு.. இந்திய தபால்துறையில் 40,889 காலி இடங்கள்.. 10-ம் வகுப்பு தேர்ச்சி போதும்..

இந்தியா முழுவதும் காலியாக உள்ள கிராமின் டக் சேவக் பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை இந்தியா போஸ்ட் வெளியிட்டுள்ளது.. தபால் அலுவலக கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி போஸ்ட் மாஸ்டர் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படுகிறது. இதன் மூலம் தபால் துறை 40,889 காலியிடங்களை நிரப்பவுள்ளது.

indian post 1

கிராமின் டக் சேவக், கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி கிளை போஸ்ட்மாஸ்டர் ஆகியவற்றுக்கான விண்ணப்ப செயல்முறை ஜனவரி 27, 2023 அன்று தொடங்கியது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 16, 2023 கடைசி நாளாகும்.. பிப்ரவரி 17 முதல் பிப்ரவரி 19 வரை மூன்று நாட்களுக்கு விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்படும்.. மேலும் தகவலுக்கு www.indiapostgdsonline.gov.in என்ற இணையதளத்தை பார்வையிடலாம்.

தகுதி வரம்பு: இந்தப் பதவிக்கான வயது வரம்பு 18-40க்குள் இருக்க வேண்டும். அறிவிப்பின்படி விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் கடைசி தேதியில் விண்ணப்பதாரரின் வயது தீர்மானிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் 10-ம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 10-ம் வகுப்பில் ஆங்கிலம் அல்லது கணிதம் கட்டாயம் ஒரு பாடமாக இருந்திருக்க வேண்டும்.. மேலும், விண்ணப்பதாரர்கள் தங்கள் பகுதியின் உள்ளூர் மொழியை குறைந்தபட்சம் இரண்டாம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் போதுமான கணினி அறிவு பெற்றிருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்களுக்கு கட்டாயம் சைக்கிள் ஓட்ட தெரிய வேண்டும்.

எப்படி விண்ணப்பிப்பது: விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தை www.indiapostgdsonline.in என்ற இணையதளத்தில் சமர்ப்பிக்க வேண்டும். வேறு எந்த விண்ணப்ப முறையும் ஏற்றுக்கொள்ளப்படாது. ஏதேனும் கேள்விகள் மற்றும் உதவிக்கு, விண்ணப்பதாரர்கள் பிரிவு வாரியான ஹெல்ப் டெஸ்க்கை தொடர்பு கொள்ளலாம்.. உதவி மொபைல் எண்கள் இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளன.

கட்டணம் செலுத்துதல்: SC/ST மற்றும் பெண் விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் இல்லை, மற்ற விண்ணப்பதாரர்களுக்கு 100 ரூபாய் செலுத்த வேண்டும்.

1newsnationuser1

Next Post

தொடரும் பரபரப்பு...! பிபிசி ஆவணப்படத்தை திரையிட முயன்ற 24 மாணவர்கள் கைது...! காவல்துறை விளக்கம்...!

Sat Jan 28 , 2023
மோடி குறித்த பிபிசி ஆவணப்படத்தை திரையிட முயன்ற டெல்லி பல்கலைக்கழகத்தின் 24 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். பிரதமர் நரேந்திர மோடி குறித்த பிபிசி ஆவணப்படத்தை திரையிட தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் மற்றும் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் கடந்த சில தினங்களாக போராட்டங்கள் அடுத்த வருகின்ற. அதை தொடர்ந்து தற்பொழுது டெல்லி பல்கலைக்கழகம் மற்றும் அம்பேத்கர் பல்கலைக்கழக மாணவர்களும் திரையிட தடைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். டெல்லி […]
image 19

You May Like