நடிகர் விஜய்யின் ’தமிழன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் பிரியங்கா சோப்ரா. இவர், சினிமாவில் புகழின் உச்சத்தில் இருக்கும்போதே அமெரிக்கா பாடகர் லிக் ஜோனாஸை மணந்தார். இப்போது அமெரிக்காவில் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். பிரியங்கா சோப்ரா, ஒரு பேட்டியில் கலந்து கொண்டபோது, பாலின எதிர்ப்புகள் மற்றும் நவீன உறவுகள் பற்றி பேசியிருந்தார்.
இதுதொடர்பான அந்த பேட்டியில், “எந்த ஆணும் தனது மனைவி கன்னியாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது” என்று பிரியங்கா பேசியுள்ளார். இதுதான் தற்போது விவாதத்தை கிளப்பியுள்ளது. பிரியங்கா சோப்ராவின் கருத்தை பலர் வரவேற்றாலும், சிலர் ஆண்கள் கன்னித்தன்மையை எதிர்பார்க்கக் கூடாது என்றால், பெண்கள் செல்வத்தையும், அதிக வருமானம் தருவதை எதிர்பார்க்கக் கூடாது. நல்ல குணம் கொண்ட ஆண்களை மட்டும் தானே பெண்கள் எதிர்பார்க்க வேண்டும்.? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
நடிகைகள் எதார்த்தத்தை உணராமல் ஏதேதோ பேசி விடுகிறார்கள். ஆனால், அது ஆண்களுக்குத்தான் கஷ்டம். திருமணத்திற்கு பெண்கள் கிடைக்காமல் பலர் தவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றெல்லாம் 90ஸ் கிட்ஸ்களும் கமெண்ட் போட்டு வருகின்றனர். அதேபோல், பெண்கள் எப்படி இருந்தாலும் பராவாயில்லை என்ற மனநிலைக்கு பல ஆண்கள் வந்து விட்டார்கள். அதனாலயே பல கல்யாண ராணிகளிடம் 90ஸ் இளைஞர்கள் ஏமாந்து கொண்டு இருக்கிறோம் என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த பேட்டி சமீபத்தியது இல்லை என்றாலும், இது இப்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.