ஃபேஸ்புக் பயனர்களின் தகவல்களை கடத்திய மெட்டா!… 10 ஆயிரம் கோடி அபராதம்!… ஐரோப்பிய அரசு அதிரடி!

விதிகளை மீறி ஃபேஸ்புக் தகவல்களை கடத்தியதாக கூறி மெட்டா நிறுவனத்திற்கு ஐரோப்பிய அரசு 10 ஆயிரம் கோடி அபராதம் விதித்துள்ளது.


ஸ்மார்ட்போன் பயனர்களிடம் மிக அதிகமாக பயன்படுத்தப்பட்டு வரும் பேஸ்புக் , வாட்ஸாப் , இன்ஸ்டாகிராம் ஆகிய செயலிகளின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனத்திற்கு ஐரோப்பிய அரசு அபராதம் விதித்துள்ளது. ஐரோப்பிய நாட்டின் தகவல் பரிமாற்ற பாதுகாப்பு சட்டத்தின் படி, ஐரோப்பிய பயனர்களின் தரவுகளை வெளிநாட்டிற்கு கொண்டு செல்ல கூடாது. ஆனால் மெட்டா நிறுவனம் ஐரோப்பிய நாட்டின் பேஸ்புக் பயனர்களின் தரவுகளை அமெரிக்காவுக்கு மாற்றியதாக கூறப்படுகிறது.

இந்த புகாரின் அடிப்படையில் மெட்டா நிறுவனத்திற்கு இந்திய ரூபாய் மதிப்பில் 10,767 கோடி ரூபாய் அளவில் அபராதம் விதித்துள்ளது. தகவல் பாதுகாப்பு சட்டத்தின் படி ஐரோப்பாவில் விதிக்கப்பட்ட அதிகபட்ச அபராத தொகை இதுவாகும். இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்ய போவதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

KOKILA

Next Post

இந்தியாவில் அறிமுகமாகும் ‘OnePlus 11 5G’!... விலை எவ்வளவு தெரியுமா?... புதுபுது சிறப்பம்சங்கள்!

Fri May 26 , 2023
ஒன்பிளஸ் நிறுவனம் இந்தியாவில் ஒரு புதிய மார்பில் ஒடிசி (Marble Odyssey Colour) நிறத்துடன் OnePlus 11 5G  ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தவுள்ளது. ஸ்மார்ட்போன் பிரியர்கள் அனைவராலும் அதிகம் விரும்பப்படும் ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன், கேமரா மட்டுமல்லாமல் அனைத்து வித பயன்பாட்டிற்கும் அருமையாக இருக்கும். தற்பொழுது, ஒன்பிளஸ் நிறுவனம் அதன் சாதன வெளியீட்டு நிகழ்வில் பல அட்டகாசமான சாதனங்களுடன் ஒன்பிளஸ் 11 5G (OnePlus 11 5G) ஸ்மார்ட்போனை வெளியிட்டது.இந்த நிகழ்வில் […]
OnePlus 11 5G 5

You May Like