அடுத்த 2️ மணி நேரத்தில் தமிழகத்தில் வெளுத்து வாங்கப் போகும் கனமழை வானிலை ஆய்வு மையம் தகவல்….!

தமிழகத்தில் கோடை வெயில் பொளந்து கட்ட தொடங்கிய சூழ்நிலையில், கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. கடுமையான வெயிலின் காரணமாக, அவதிப்பட்டு வந்த மக்களுக்கு இந்த திடீர் மழை மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. வளிமண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு திசைக்காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் நிகழ்வு காரணமாக, தமிழகத்தில் மழை தொடர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இத்தகைய சூழ்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், அரியலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், கோவை, திருச்சி, பெரம்பலூர், சிவகங்கை, தேனி, தென்காசி மற்றும் திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் மழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறி இருக்கிறது.

முன்னதாக தமிழகத்தில் வரும் 25ஆம் தேதி மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Post

’சம்பளம் கேட்டா அடிப்பீங்களா’..? ’வணங்கான்’ திரைப்பட துணை நடிகை மீது தாக்குதல்..!!

Wed Mar 22 , 2023
சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களை இயக்கிய பாலா, இப்போது வணங்கான் என்ற படத்தை இயக்கி வருகிறார். முதலில் இந்த படத்தில் நடிகர் சூர்யா ஒப்பந்தமாகி இருந்தார். ஆனால், சில காரணங்களால், இப்படத்தில் இருந்து சூர்யா விலகினார். அதன்பின் இந்த படத்தை அருண் விஜய் மற்றும் ரோஷினி நடிப்பில் பாலா இயக்கி வருகிறார். இந்நிலையில், வணங்கான் படப்பிடிப்பு கன்னியாகுமரி சுற்றுவட்டார பகுதிகளில் நடந்து வருகிறது. இங்கு […]
Bala

You May Like