தமிழகத்தில் கோடை வெயில் பொளந்து கட்ட தொடங்கிய சூழ்நிலையில், கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. கடுமையான வெயிலின் காரணமாக, அவதிப்பட்டு வந்த மக்களுக்கு இந்த திடீர் மழை மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. வளிமண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு திசைக்காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் நிகழ்வு காரணமாக, தமிழகத்தில் மழை தொடர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இத்தகைய சூழ்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், அரியலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், கோவை, திருச்சி, பெரம்பலூர், சிவகங்கை, தேனி, தென்காசி மற்றும் திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் மழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறி இருக்கிறது.
முன்னதாக தமிழகத்தில் வரும் 25ஆம் தேதி மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.