“உங்கள் வேலையை மட்டும் பாருங்க”!. தமிழக அரசை சாடிய கர்நாடக முதல்வர்!. அமைச்சர் நிர்மல்குமார் பதிலடி!

DKShivakumar

கர்நாடக மாநிலம் சாமராஜநகர் மாவட்டம் ஹனூர் தாலுகாவில் உள்ள காவிரி வனவிலங்கு சரணாலயப் பகுதியில், தமிழர்களான அந்தோணி சாமி, ஜான் ரோஸ் பீட்டர் மற்றும் குமார் ஆகிய 3 பேர் கர்நாடக வனத்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் இரு மாநிலங்களுக்கு இடையேயான பெரிய அரசியல் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிடக் கூடாது என்று கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமார் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.


சாமராஜநகர் துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்தச் சம்பவத்தைக் கண்டித்து சிபிஐ விசாரணை நடத்தவும் கூடுதல் நிவாரணம் வழங்கவும் வலியுறுத்தினார். திமுக தரப்பில் கர்நாடக அரசுக்கு அழுத்தம் தர கோரப்பட்டதுடன், சிபிஐ மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகளும் தங்களது கண்டனங்களையும் முறையான விசாரணையையும் கோரி குரல் எழுப்பின.

தமிழக அரசியல் தலைவர்களின் தொடர் கண்டனங்கள் மற்றும் சட்டமன்ற விவாதங்கள் குறித்துப் பேசிய கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமார், எந்தவொரு மாநிலமும் மற்றொரு மாநிலத்தின் நிர்வாகத்தில் தலையிடக் கூடாது என்றும், தான் தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளில் தலையிடுவதில்லை என்பதால் தமிழக அரசும் தனது வேலையை மட்டும் பார்க்க வேண்டும் என்றும் காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்.

கர்நாடக முதல்வரின் கடுமையான பதிலுக்குப் பதிலளித்த தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், இந்த விவகாரத்தில் நடுநிலையான விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். மேலும், நீதிபதியின் முதற்கட்ட விசாரணைக்கு பிறகு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குக் கூடுதல் நிவாரண உதவி வழங்க கர்நாடக அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகச் சட்டமன்றத்தில் உறுதி அளித்தார்.

ஆகஸ்ட் 15 ஆம் தேதி அதிகாலை வேளையில் காவிரி வனவிலங்கு சரணாலயத்திற்குட்பட்ட ஹனூர் தாலுகாவின் ஷாக்யா வனப்பகுதியில் இச்சம்பவம் நடைபெற்றது. வனத்துறையினரை நோக்கித் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதால் தற்காப்புக்காகத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகக் கர்நாடக வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser5

Next Post

நாடு முழுவதும் தாக்குதல் நடத்த திட்டமிட்ட கும்பல்.. 200-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் அதிரடி கைது!

Tue Aug 18 , 2026
சுதந்திர தினத்துக்கு முன்பாக நாடு முழுவதும் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்புடன் தொடர்புடையதாக கூறப்படும் 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையில் ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பாகிஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட ஷெசாத் பட்டி என்பவர் சமூக வலைதளங்கள் மூலம் இந்திய இளைஞர்களை தொடர்புகொண்டு, அவர்களை தனது குழுவில் இணைத்து வந்துள்ளார். வெளிநாடுகளில் வசித்து வரும் அவர், சமூக வலைதளங்களில் தன்னை […]
f94a69bade8bb899269f5385eb2bc0eef85ee130dfa6c8bf3221bd9a67a5cb87

You May Like