பூந்தமல்லி பகுதியில் அம்சவல்லி(40) தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கணவரை பிரிந்து வாழும் இவர் தனது மகளுடன் சங்கீதா(18) அதே பகுதியில் வசித்து வருகிறார்.
நேற்று காலையில் வழக்கம் போல அம்சவல்லி வேலைக்கு சென்றுவிட்டு மீண்டும் இரவு வீட்டிற்கு வந்த போது மகள் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருந்துள்ளார்.அத்துடன் மகள் கொலுசு, கம்மல் மற்றும் பணம் திருடு போயிருந்தது தெரியவந்தது.
அம்சவல்லி இதனை பற்றி பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், சங்கீதாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் மேற்கொண்ட விசாரணையில், அம்சவல்லிக்கும் அதே பகுதியில் வசிக்கும் ராஜூ (38) என்ற நபருக்கும் கடந்த 4 ஆண்டுகளாக கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது தெரிய வந்தது.
இதனிடையில் மகளுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது , அந்த சமயத்தில் வீட்டிற்கு வந்த கள்ளக்காதலன் அவரின் கழுத்தை நெரித்து விட்டு கொலுசு, கம்மல், போன்றவற்றை எடுத்து கொண்டு சென்றுள்ளார், என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.