புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் பெண் பயிற்சியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை…!

Govt Scholarship 2025

சேலம், அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற விருப்பமுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி, வெளியிட்ட செய்தி குறிப்பில்; 2025-ம் ஆண்டில் அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேரவும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு சேரவும் www.skilltraining.tn.gov.in என்ற தொழிற்பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.


இணையதளம் வாயிலாக வெல்டர், வர்ணம் பூசுபவர் (பொது), கம்பியாள் போன்ற பிரிவுகளுக்கு 8-ம் வகுப்பிலும், மின்பணியாள், பொருத்துநர், பொருத்துநர் (DUAL), இயந்திர வேலையாள், இயந்திர வேலையாள் (அரவை), கடைசலர் கம்மியர் மோட்டார் வண்டி, AC மெக்கானிக் கோபா மற்றும் தொழிற்சாலைகளின் நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப தொடங்கப்பட்ட Technology centre 4.06 Manufacturing Process control & Automation. Industrial Robotics & Digital Manufacturing Technician. Mechanic Electric Vehicle, Advanced CNC machining technician போன்ற பிரிவுகளுக்கு 10-ம் வகுப்பிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், கைபேசி எண். e-mail id, ஆதார் அட்டை மற்றும் முன்னுரிமை கோரினால் முன்னுரிமைச் சான்றிதழ். பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் சேலம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் உள்ள சேர்க்கை உதவி மையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ.50/-(Debit Card/ Gpay அல்லது Net banking மூலம் செலுத்தலாம்).

பயிற்சி பெறும் மாணவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.750/-ம், பாடநூல் சைக்கிள் சீருடை, வரைபடக் கருவி, காலணி, பஸ் பாஸ் மற்றும் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் பெண் பயிற்சியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை மற்றும் தமிழ்புதல்வன் திட்டத்தின் கீழ் ஆண் பயிற்சியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும். மேலும், பயிற்சி முடித்த பின் முன்னனி நிறுவனங்களில் Campus Interview மூலம் வேலை வாய்ப்பு பெற்றுத்தரப்படும். மகளிருக்கு குறைந்தபட்ச வயது 14, வயது மற்றும் உச்சவரம்பு இல்லை. ஆண்களுக்கு வயது வரம்பு 14 முதல் 40 வயது வரை ஆகும். விருப்பமுடையவர்கள் 13.06.2025 க்குள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More: விவசாயிகளுக்கு மகிழ்ச்சி செய்தி…! இனி 15 நாட்களுக்கு ஒருமுறை முகாம்…! தமிழக அரசு தொடங்கிய புதிய திட்டம்…!

Vignesh

Next Post

குட் நியூஸ்..! போக்குவரத்து ஊழியர்களுக்கு 2023 செப்.1 முதல் அடிப்படை ஊதியத்தில் 6% உயர்த்தி வழங்க ஒப்புதல்...!

Fri May 30 , 2025
போக்குவரத்து ஊழியர்களுக்கு 2023 செப்.1 முதல் அடிப்படை ஊதியத்தில் 6% உயர்த்தி வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டது. போக்குவரத்து தொழிலாளர்கள் உடனான பேச்சுவார்த்தையில் முடிவு எடுக்கப்பட்டது. இந்த ஊதிய உயர்வின் மூலம் குறைந்தபட்சம் ரூ.1,420ல் முதல் |அதிகபட்சம் ரூ.6,460 வரை பணப்பலன்கள் கிடைக்கும். நிலுவைத் தொகையை 2024 செப்டம்பர் 1 முதல் 4 காலாண்டு தவணையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மே 27 அன்று 12 மணி […]
Bus 2025

You May Like