மத்திய பிரதேச மாநிலத்தில் பழங்குடியின இளைஞர் மீது குடிபோதை நபர் சிறுநீர் கழித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி கடும் கண்டனத்திற்குரிய விஷயமாக மாறியது. சம்பவம் குறித்து முதல்வர் சிவராஜ்சிங் சவுகான், நடந்த சம்பவம் வேதனை அளிப்பதாகவும், குற்றவாளி மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி சிறுநீர் கழித்த நபர் பர் வேஸ் சுக்லா என்பவரை போலீசார் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்தனர் என்று அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பதற்கான வேலைகளை மாநில காவல்துறை முன்னெடுத்துள்ளது.