“ஈரான் – இஸ்ரேல் போர் நிறுத்தத்திற்காக இல்ல.. அதை விட பெரிய விஷயம்..” புதிர் போடும் ட்ரம்ப்..

2f2ac4021f8796d8d097c5724f3e2542

ஜி7 தலைவர்கள் கூட்டத்தில் இருந்து முன்கூட்டியே வெளியேறியதற்கும் இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்களிடம், இன்னும் தாமதமாவதற்கு முன்பு ஈரான் பேசி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறினார். ஜி7 உச்சி மாநாட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இஸ்ரேலை ஆதரித்து பேசினார். டெல் அவிவ் மீதான போரில் ஈரான் வெற்றி பெறாது”என்று கூறினார்.


தொடர்ந்து பேசிய ட்ரம்ப் “ கனடாவில் நடந்த ஜி7 தலைவர்கள் கூட்டத்தில் இருந்து முன்கூட்டியே வெளியேறியதற்கும் இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால் அதே நேரம், அதை விட மிகப் பெரிய விஷயத்திற்காக நான் முன்கூட்டியே வெளியேறினேன்..” என்று அவர் கூறினார்.

தனது துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸையும் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப்பையும் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த அனுப்பக்கூடும் என்று ட்ரம்ப் கூறினார். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் மோதலுக்கு உண்மையான தீர்வை அடைய விரும்பினாலும், ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தும் மனநிலையில் இல்லை. நான் எந்த வகையிலும், எந்த வடிவத்திலும் சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு ஈரானை அணுகவில்லை..

ஈரான் அமெரிக்காவுடன் பேச விரும்பினால், என்னை எப்படி அணுகுவது என்பது அவர்களுக்குத் தெரியும். மேசையில் இருந்த அணுசக்தி திட்ட ஒப்பந்தத்தை ஈரான் எடுத்திருக்க வேண்டும்” என்றும் ட்ரம்ப் தெரிவித்தார்.

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல் 5வது நாளை எட்டியுள்ளது, இரு தரப்பிலிருந்தும் தொடர்ச்சியான தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. இஸ்ரேல் மீது ஈரான் புதிய தாக்குதல்களை நடத்திய நிலையில், மேற்கு ஈரானில் உள்ள ஏவுகணை மற்றும் ட்ரோன் தளங்களை குறிவைத்து தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய தாக்குதல்களில் சுமார் 224 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 1,200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று ஈரான் கூறியுள்ளது. அதே போல் இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களில் சுமார் 24 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 592 பேர் காயமடைந்துள்ளதாகவும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே இன்று நடந்த தாக்குதலில் ஈரானின் உயர்மட்ட இராணுவத் தளபதி அலி ஷத்மானி கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் கூறியது. இதனால் இரு நாடுகள் இடையேயான பதற்றம் மேலும் அதிகரித்து. ஈரானிய உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு மிக நெருக்கமான நபர் என்று இராணுவம் அவரைக் குறிப்பிட்டது.

இஸ்ரேல் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் “திடீரென கிடைத்த ஒரு வாய்ப்பைத் தொடர்ந்து, (இஸ்ரேலிய விமானப்படை) தெஹ்ரானின் மையப்பகுதியில் உள்ள ஒரு பணியாளர் கட்டளை மையத்தைத் தாக்கி, போர்க்காலத் தலைமைத் தளபதியும், மிக மூத்த இராணுவத் தளபதியுமான அலி ஷத்மானியை அழித்ததாக” தெரிவித்துள்ளது.

English Summary

US President Trump has said that the early exit of the G7 leaders’ meeting had nothing to do with the ceasefire talks between Israel and Iran.

RUPA

Next Post

ரயில்வேயில் 6,180 காலிப்பணியிடங்கள்.. மெகா வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்ட RRB !

Tue Jun 17 , 2025
The Railway Recruitment Board has issued a notification to fill 6,180 vacant posts in Indian Railways.
rrb recruitment 2025 jpg 1735279278058 1735279279943 1200x675 1

You May Like