உலகெங்கும் உள்ள முருக பக்தர்களை ஒருமித்துப் பிரமாண்ட நிகழ்வாக நடத்தும் நோக்கில், மதுரையில் இன்று முருக பக்தர்கள் மாநாடு வெகு விமரிசையாக தொடங்கியது. இந்து முன்னணி அமைப்பின் ஏற்பாட்டில், சங்கத்தை உருவாக்கி தமிழ் வளர்த்த மதுரையிலேயே, தமிழ்க்கடவுள் முருகனுக்காக இம்மாநாடு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அறுபடை வீடுகளில் முதலாம் படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவிலை மையமாகக் கொண்ட சர்ச்சைகளுக்குப் பிறகு, முருகனுக்கான பற்று மக்களிடையே பெரிதும் அதிகரித்துள்ளது. வேல் யாத்திரை, பழனியில் நடைபெற்ற முத்தமிழ் முருகன் மாநாடு போன்ற நிகழ்வுகள் மூலமாக இந்த உணர்வு மேலும் வலுப்பெற்று வருகிறது. அதே தோற்றத்தில், மதுரையில் இம்மாநாடு நடைபெறுவது முக்கியத்துவம் வாய்ந்ததாகவே பார்க்கப்படுகிறது.
மாநாடு நடைபெறும் பாண்டி கோவில் அம்மா திடலில், வேல் ஏந்திய முருகப்பெருமான் தோற்றத்தில் பிரமாண்ட நுழைவு வாசல் அமைக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலையின் வடிவம் பிரதிபலிக்கும் மேடை, பார்வையாளர்களின் பாராட்டை பெற்றுள்ளது. 5 லட்சம் பக்தர்கள் அமரும் வகையில் 3 லட்சம் சதுர அடியில் தரை விரிப்புகள் மற்றும் 1 லட்சம் இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. முதியோர், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் வசதிக்கு தனித்தனி பகுதிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
கடந்த இரண்டு நாட்களாகவே வெளிமாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கானோர் மதுரையில் வந்து சேர்ந்துள்ளனர். அவர்கள் மதுரை மற்றும் அதன் சுற்றுப்புற ஆன்மிக தலங்களுக்கு தரிசனம் மேற்கொண்டு, இன்று காலை மாநாட்டு திடலில் குவிந்தனர். முருக பக்தர்களின் ஒற்றுமை, பக்தி, உற்சாகம் இந்நிகழ்வின் ஊடாக வெளிப்பட்டுள்ளது.
மாநாட்டை ஒட்டி சுமார் 2000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு வசதியாகவும், பொதுமக்கள் இடையூன்றி செல்வதற்காகவும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 15க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள், 50க்கும் மேற்பட்ட இடங்களில் குடிநீர்த்தொட்டிகள், 100க்கும் மேற்பட்ட தற்காலிக கழிவறைகள், உடனடி சிகிச்சையளிக்க அமைக்கப்பட்டுள்ளன. இரண்டு கட்ட பாதுகாப்பிற்கு பின் மாநாட்டிற்கு வரும் நபர்கள், பொதுமக்கள் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.
Read more: மீன்வளத் துறை வேலை வாய்ப்பு.. டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிங்க..!! செம சான்ஸ்..