fbpx

வளர்ப்பு மகனின் சடலத்துடன் 4 நாட்கள்..! வீட்டை திறந்தபோது போலீசுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

வளர்ப்பு மகனின் சடலத்துடன் 4 நாட்கள் தனியாக இருந்த முதியவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சண்டிகர் மாநிலம் மொஹாலி என்ற பகுதியில் வசித்து வருபவர் 82 வயது முதியவர் பல்வந்தர் சிங். இவருக்கு திருமணம் ஆகாத நிலையில், சுக்விந்தர் சிங் என்பவரை தத்தெடுத்து வளர்த்து வந்தார். இருவரும் அந்த பகுதியில் வாழ்ந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக முதியவர் வீட்டை விட்டு வெளியே வரவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால், அவரது வீட்டை கடக்கும்போது மட்டும் துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால், சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள், முதியவரின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது, முதியவரின் வளர்ப்பு மகன் சடலமாக இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

வளர்ப்பு மகனின் சடலத்துடன் 4 நாட்கள்..! வீட்டை திறந்தபோது போலீசுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

இதையடுத்து, இறந்தவரின் உடலை மீட்க போலீசார் முயற்சித்தபோது, முதியவர் தடுத்ததால், அவர் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார். பின்னர், உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், ”முதியவர் தனது வளர்ப்பு மகன் இறந்ததை ஏற்றுக்கொள்ள முடியாமல், எங்களை அவர் உடலை மீட்க அனுமதிக்கவில்லை. பின்னர் அவரை வெளியே அனுப்பி நாங்கள் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளோம். அவரது வளர்ப்பு மகன் இறந்து 4 நாட்களாவது இருக்கும். ஆனால், அவர் எப்படி இறந்தார் என்பது முதியவருக்குதான் தெரியும். அவரோ தற்போது அதிர்ச்சியில் இருக்கிறார்”. என்று தெரிவித்தனர்.

Chella

Next Post

இரவு நேரத்தில் தனியாக ஆட்டோவில் சென்ற பெண்... ஓட்டுனரால் நேர்ந்த விபரீதம்..!

Wed Aug 31 , 2022
கோயம்புத்தூர், ஈரோடு மாவட்டம் கோட்டை பகுதியை சேர்ந்த 22 வயது இளம்பெண், கோவை செல்வபுரத்தில் உள்ள அப்பார்ட்மெண்ட் ஒன்றில் தங்கி இருக்கிறார். அவர், கடந்த பத்து மாதமாக கோவையில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அந்த பெண், கடந்த 28-ஆம் தேதி திருப்பூருக்கு சென்றார். அங்கு தனது வேலை முடிந்த பின்னர் பேருந்தில் புறப்பட்டு நள்ளிரவு 12.30 மணியளவில் கோவை ஹோப்காலேஜ் பேருந்து நிறுத்தத்தில் வந்து இறங்கினார். […]
மகள்கள் என்றும் பாராமல் மதுபோதையில் தந்தை செய்த காரியம்..! உடலில் நக கீறல்..! தாய் அதிர்ச்சி..!

You May Like