fbpx

மட்டன் சாப்பிட்ட 9 வயது சிறுமி பலி..!! குடும்பமே மருத்துவமனையில் அனுமதி..!! நடந்தது என்ன..?

ஆந்திர மாநிலத்தில் அரக்கு கனேலா என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் வசித்து வரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் இரவு நேரத்தில் மட்டன் சாப்பிட்டுள்ளனர். பின்னர், அனைவரும் இரவு படுத்து தூங்கிய நிலையில், திடீரென அனைவருக்கும் வாந்தி மற்றும் மயக்கம் போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர்களை உறவினர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இதில், சிகிச்சை பெற்று வந்த மீனாட்சி என்ற 9 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மீதமுள்ள 8 பேரின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

கள்ளக்காதனுடன் உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்த கணவன்…..! மிளகாய் பொடி தூவி கொலை செய்த மனைவி…..!

Thu Mar 16 , 2023
கிருஷ்ணகிரி மாவட்டம் வேலம்பட்டி அருகே என் தட்டத்தில் என்ற கிராமத்தைச் சேர்ந்த கந்தன் சென்ற 5 ஆண்டுகளுக்கு முன்னர் சமகாலப்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த சந்தியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்தார். இந்த தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றன. இந்த நிலையில் கந்தன் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இத்தகைய நிலையில், கந்தனின் மனைவி சந்தியாவிற்கு அதே பகுதியை சேர்ந்த சிவசக்தி என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த பழக்கம் […]

You May Like