fbpx

யாராலும் திறக்க முடியாத மர்மக் கதவு.. பல ஆயிரம் ஆண்டுகளாக தொடரும் மர்மம்..

உலகில் பல மர்மமான இடங்கள் உள்ளன.. அந்த இடங்களை பற்றி பல்வேறு ஆச்சர்யமான தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.. அந்த வகையில் இன்று ஒரு மர்மமான கதவைப் பற்றி பார்க்கலாம். இந்த மர்மக் கதவு பீகாரில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான ராஜ்கிரில் உள்ள ஒரு குகைக்குள் அமைந்துள்ளது. இன்று வரை இந்தக் கதவை யாராலும் திறக்க முடியவில்லை.

இந்தக் கதவுக்குப் பின்னால் தங்கப் புதையல் இருப்பதாகக் கூறப்படுகிறது. பல ஆயிரம் முறை முயன்றும் இன்று வரை யாராலும் திறக்க முடியவில்லை. ஹரியங்கா வம்சத்தை நிறுவிய பிம்பிசாரா தங்கம் மற்றும் வெள்ளியை விரும்பினார். இதனால், நகைகளை சேகரித்து வந்தார் என்றும் வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்..

இந்த ராஜ்கிர் குகையில் பிம்பிசாரரின் விலைமதிப்பற்ற பொக்கிஷம் இருப்பதாக கூறப்படுகிறது. அவரின் மனைவி அந்த பொக்கிஷத்தை மறைத்து வைத்திருந்தார் என்றும் கூறப்படுகிறது. ஆனால், இன்றுவரை இந்தப் புதையலை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்தக் குகைக்குச் செல்ல ஆங்கிலேயர்கள் பலமுறை முயன்றும் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை. ராஜ்கிர் குகை பிம்பிசாரரின் மனைவியால் கட்டப்பட்டது. இங்குள்ள தங்க புதைய இன்றும் மர்மமாகவே உள்ளது. இந்த மர்மமான குகையைக் காண ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள்.

Maha

Next Post

கெட்ட கொழுப்பு கரைய வேண்டுமா..? உணவில் இந்த காய்கறிகளை சேர்த்துக் கொண்டால் போதும்..

Mon Aug 22 , 2022
உங்கள் இரத்த நாளங்களில் கெட்ட கொலஸ்ட்ரால் சேர்ந்திருந்தால் கவலைப்படத் தேவையில்லை, உணவில் சிறிய மாற்றங்களைச் செய்வதன் மூலம் அதை சரிசெய்யலாம். இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.. சரியான நேரத்தில் உணவு உண்ணாததாலும், ஆரோக்கியத்தை அலட்சியப்படுத்துவதாலும் பல நோய்கள் உருவாகின்றன. உயர் இரத்த அழுத்தம் மற்றும் மாரடைப்பு போன்ற தீவிர நோய்களை உருவாக்கும் அபாயமும் உள்ளது. இந்த தீவிர நோய்களில் கொலஸ்ட்ராலும் சேர்க்கப்பட்டுள்ளது. உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிப்பது இதய நோய் அபாயத்தை அதிகரிக்கிறது. […]

You May Like