fbpx

வங்கிக்கணக்கில் தவறுதலாக ரூ.11,677 கோடி பணம் பெற்ற நபர்.. கடைசியில் ட்விஸ்ட்…

குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்த ரமேஷ் சாகர் கடந்த 6 ஆண்டுகளாக பங்குச்சந்தையில் முதலீடு செய்து வருகிறார்.. அவர் கோடக் செக்யூரிட்டிஸில் தனது டிமேட் கணக்கைத் தொடங்கினார். ஒரு மாதத்திற்கு முன்பு, ரமேஷ் சாகரின் கணக்கில் ரூ.11,677 கோடி பணம் வந்தது அவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.. 8 மணி நேரத்திற்கும் மேலாக அவரது கணக்கில் பணம் இருந்தது.

இருப்பினும், சில மணிநேரங்களில் அந்த பெரும் தொகை திரும்பப் பெறப்பட்டதால், அவரின் மகிழ்ச்சி நீடிக்கவில்லை.. இதுகுறித்து பேசிய அவர் “ ஜூலை 26, 2022 அன்று, எனது கணக்கில் ரூ. 116,77,24,43,277.10 கோடியைப் பெற்றேன், அதில் நான் 2 கோடியை பங்குச் சந்தையில் முதலீடு செய்து ரூ. 5 லட்சம் லாபத்தை பெற்றேன். அன்றிரவு சுமார் 8 மணி முதல் 8.30 மணி அளவில், அந்தத் தொகையை வங்கி திரும்பப் பெற்றது,” என்று தெரிவித்தார்..

எனினும் தொழில்நுட்ப கோளாறு காரணம், வங்கிக்கணக்கில் பணம் தவறுதலாக செலுத்தப்பட்டது என்பது தெரிய்வந்துள்ளது.. ரமேஷ் மட்டுமின்றி வேறு சிலருக்கும் அன்றைய தினம் லட்சக்கணக்கான பணம் செலுத்தப்பட்டதாகவும், பின்னர் திரும்ப பெறப்பட்டதாகவும் கூறப்படுகிறது…

Maha

Next Post

கன்டெய்னர் லாரி மோதி அக்காள் , தங்கை பலி … தந்தையுடன் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது விபத்து …

Thu Sep 15 , 2022
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் கன்டெய்னர் லாரி மோதி அக்காள் தங்கை இருவரும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆம்பூர் அடுத்த வீராங்குப்பம் பகுதியைச் சேர்ந்வர் தண்டபாணி. இவருக்கு இரண்டு மகள்கள் இருந்தனர். இருவரும் ஆம்பூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தனர். மூத்த மகள் ஜெயஸ்ரீ 11ம் வகுப்பும் இளையமகள் வர்ஷா ஆறாம் வகுப்பும் படித்து வந்தனர். வழக்கம் போல தண்டபாணி தன் மகள்களை இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு […]

You May Like