fbpx

பெண்களே உஷார்..!! உடை மாற்றும் அறையில் செல்போன்..!! தனியார் மருத்துவமனையில் அதிர்ச்சி சம்பவம்..!!

தனியார் மருத்துவமனையில் பெண்கள் உடை மாற்றுவதை செல்போனில் படம் பிடித்த ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

கர்நாடகா மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டத்தில் சூரத்கல் பகுதியில் செயல்பட்டு வரும் தனியாருக்கு சொந்தமான மருத்துவமனைக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண் ஒருவர் சிகிச்சைக்காக சென்றுள்ளார். அப்பொழுது அவருக்கு மருத்துவமனையில் வழங்கப்படும் உடையை அணிந்து வரும்படி கூறியுள்ளனர். இதனால், அந்த பெண் உடை மாற்றும் அறைக்கு சென்று உடையை மாற்ற முயற்சித்துள்ளார். அப்போது, அந்த அறையில் ஏதோ ஒரு மாற்றம் தெரிந்துள்ளது. இதனால், அவர் அந்த அறையை சுற்றி பார்த்தபோது அங்கு செல்போன் ஒன்று மறைத்து வைக்கப்பட்டிருந்தது.

பெண்களே உஷார்..!! உடை மாற்றும் அறையில் செல்போன்..!! தனியார் மருத்துவமனையில் அதிர்ச்சி சம்பவம்..!!

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் சத்தம் போட்டுள்ளார். இதையடுத்து அந்தப் பெண்ணின் சத்தம் கேட்டு ஓடி வந்த மருத்துவமனை ஊழியர்கள், அந்த செல்போனை கைப்பற்றி விசாரித்தபோது, அதே மருத்துவமனையில் வேலை பார்க்கும் பவன் குமார் (21) என்ற ஊழியருடையது என்பது தெரியவந்தது. பின்னர், இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், பவன்குமாரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில், பவன் குமார் இதேபோன்று பல பெண்கள் உடை மாற்றுவதை படம் எடுத்திருந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து பவன் குமாரை கைது செய்த போலீசார், மேலும் இதுகுறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Chella

Next Post

கட்சிப் பணிக்காக நியாய விலை பணியாளரிடம் பணம் கேட்டு தொல்லை செய்த வி.சி.க பிரமுகர்!

Fri Dec 9 , 2022
ஒரு அரசியல் கட்சியில் ஒருவர் இணைந்து பொதுநலப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்று நினைத்தால் அவருக்கு முதலில் தேவைப்படுவது பணம் மட்டும்தான்.என்னதான் சேவை செய்ய வேண்டும் என்ற மனப்பான்மை இருந்தாலும் கூட பணம் இருந்தால் மட்டுமே அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரையில் அரசியலில் நிலைத்து நிற்க முடியும். இதுதான் காலகாலமாக நடைபெற்று வருகிறது. சாதாரண தொண்டர்களாக இருக்கின்ற யாரும் கட்சியின் முக்கிய பொறுப்புகளில் இருப்பதில்லை. அதேபோல கட்சிகளின் முக்கிய பொறுப்புகளில் இருக்கும் […]

You May Like