fbpx

போலீசை நம்பிய பெண்ணுக்கு ஏற்பட்ட அவலம்!

இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை காட்டி காவல்துறை அதிகாரி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள பிரயாக்ராஜ் ஊரைச் சேர்ந்தவர் சுனில்குமார் சிங் இவர் காவல் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர் மீது தான் பரபரப்பு புகார் ஒன்று இளம்பெண்ணால் வழங்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக அவர் கொடுத்த புகார் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. அந்த புகாரில் கூறியதாவது, பிராயாக்ராஜ் பகுதியில் வசித்து வரும் போலீஸ் அதிகாரியான சுனில்குமார் சிங் என்பவருக்கும், அதே பகுதியில் வசித்து வரும் இளம் பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, நட்பாக பழகி வந்துள்ளனர். இவர்களது பழக்கம் காதலாக மாறியுள்ளது.

இதனிடையே இருவரும் பல இடங்களுக்கு சென்று வந்துள்ளனர். சுனில் குமார் சிங் அந்தப் பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இந்த நிலையில், அந்த பெண் திருமணம் செய்து கொள்ளும்படி கூறியுள்ளார், அதற்கு சுனில்குமார் மறுப்பு தெரிவித்து இந்த விஷயம் தொடர்பாக வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டி உள்ளார்.

இதனைத் தொடர்ந்து அந்தப் பெண் சுனில்குமார் மீது போலீசில் புகார் கொடுத்துள்ளார், அதில் சுனில்குமார் தன்னை ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து கொள்வதாக பல இடங்களுக்கு கூட்டிச் சென்று, 50 முறைக்கும் மேல் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகாரில் தெரிவித்துள்ளார். ஒரு பொறுப்பான காவல்துறை பதவியில் இருந்து கொண்டு, சுனில்குமார்சிங் இளம் பெண்ணை ஏமாற்றி ஏமாற்றியது அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது

Next Post

பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு..!! முதலமைச்சர் முக.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு..!!

Wed Dec 28 , 2022
பொங்கல் பரிசு தொகுப்பில் முழு கரும்பும் இடம் பெறும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  தமிழகத்தில் பொங்கல் பண்டிகை ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த முறை, குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்பவர்களுக்கு பணத்துடன் கூடிய ஒரு கிலோ பச்சரிசி ஒரு கிலோ சர்க்கரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், […]
பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு..!! முதலமைச்சர் முக.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு..!!

You May Like