fbpx

சுடுகாட்டில் கேக் வெட்டி பிரியாணி விருந்து..!! பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடிய நபர்..!! என்ன காரணம்?

மகாராஷ்டிராவில் தனது பிறந்தநாளை சுடுகாட்டில் கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தைச் சேர்ந்தவர் கவுதம் ரத்தன் (54). இவர், கடந்த 19ஆம் தேதி தனது பிறந்தநாளை முன்னிட்டு அப்பகுதியில் உள்ள சுடுகாட்டில் வைத்து விமரிசையாக கொண்டாடியுள்ளார். இந்த விழாவில் 40 குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். கேக் வெட்டிய கவுதம் ரத்தன், விருந்தினர்களுக்கு பிரியாணி வழங்கி உபசரித்தார்.

சுடுகாட்டில் கேக் வெட்டி பிரியாணி விருந்து..!! பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடிய நபர்..!! என்ன காரணம்?

சுடுகாட்டில் பெரிய பேனரும் வைக்கப்பட்டிருந்தது. கவுதம் கேக் வெட்டுவது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கவுதம், “சமூகத்தில் நிலவும் சூனியம் மற்றும் பேய் குறித்த மூட நம்பிக்கையை ஒழிப்பதற்காகவே சுடுகாட்டில் வைத்து எனது பிறந்த நாளை கொண்டாடினேன்” என்று தெரிவித்தார்.

சுடுகாட்டில் கேக் வெட்டி பிரியாணி விருந்து..!! பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடிய நபர்..!! என்ன காரணம்?

Chella

Next Post

சபரிமலை ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு..!! கேரளா சுகாதாரத்துறை போட்ட அதிரடி உத்தரவு..!!

Fri Nov 25 , 2022
சபரிமலைக்கு வரும் பக்தர்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீசார் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என கேரளா சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் கார்த்திகை மாதத்தில் தான் மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்படும். இங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து மாலை அணிந்து வருவார்கள். இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக சுவாமி தரிசனம் செய்ய […]
அதிர்ச்சி..!! சபரிமலை ஐயப்பன் கோவிலில் தீவிபத்து..!! 3 பேர் பலத்த காயம்..!! பெரும் பரபரப்பு..!!

You May Like