இளைஞர் ஒருவர் 10 ரூபாய் கொடுத்தால் கடும் குளிரில் ஆற்றில் புனித நீராடுவதாக கூறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
வடமாநிலங்களில் கடும் குளிர் வாட்டிவரும் நிலையில் இந்நிலையில் அங்குள்ள புனித தலங்களுக்கு சுற்றுலா செல்பவர்கள், கடும் குளிர் காரணமாக புனித நீராட முடியாமல் திரும்பிச் செல்கின்றனர். இதனை கவனித்த இளைஞர் ஒருவர், உங்களுக்கு பதிலாக உறைய வைக்கும் குளிரில் நதியில் நீராடுகிறேன் என்றும், அதற்கு கட்டணமாக 10 ரூபாய் தந்தால் போதும் என தெரிவிக்கிறார்.
இந்த வீடியோவை ‘புதிய வேலைவாய்ப்பு’ என அசுதோஷ் சுக்லா என்பவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை 1 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்து ஷேர் செய்து வருகின்றனர்.